இனி தங்கம் வாங்குவது கனவு தான் போல..!! உச்சத்தில் விலை.. திணறும் மக்கள்..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்வது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இதையும் படிங்க: புதிய உச்சத்தில் தங்கம் விலை..! வரலாறு காணாத வகையில் ஏற்றம்..! இன்றைய அப்டேட்..!!
தங்கம் விலை நிலவரம் (09/10/2025):
சமீபகாலமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரம் ரூபாயை தொட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தங்கம் விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது. கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரமும் அதிகரித்து தான் காணப்படுகிறது. அதன்படி தங்கம் விலை நேற்று காலை, மாலை என 2 முறை உயர்ந்த நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,200க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,496க்கும், கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,437-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.87 ஆயிரத்தில் பயணித்த தங்கம் விலை, தற்போது ரூ.91 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு வாரத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டும் வாய்ப்புள்ளது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.171க்கும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணம் என்ன?
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது.
இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.
இதையும் படிங்க: அதிரடி ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??