×
 

ரூ.79,000-ஐ நெருங்கும் ஒரு சவரன்.. இனி தங்கம் வாங்கும் ஆசையே போயிடும் போல..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்து ரூ.79 ஆயிரத்தை நெருங்குவது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள். 

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சமீபகாலமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. 77 ஆயிரம் ரூபாயை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் குறைந்துகொண்டே வந்த சூழலில், தற்போது ரூ.78 ஆயிரத்தை தாண்டி ரூ.79 ஆயிரத்தை நெருங்குவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது.  

இதையும் படிங்க: சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..??

தங்கம் விலை நிலவரம் (05/09/2025):

இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரமும் அதிகரித்து தான் காணப்படுகிறது, இன்று (வெள்ளிக்கிழமை) விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.78,920க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,865-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.76 ஆயிரத்திற்கு கீழ் இறங்கிய தங்கம் விலை தற்போது மீண்டும் உயர்ந்துகொண்டே வருவது இல்லதரிசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு வாரத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 அதிகரித்து ஒரு கிராம் 10 ஆயிரத்து 762 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.608 அதிகரித்து ஒரு சவரன் 86 ஆயிரத்து 096 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.136க்கும், கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம் விலை உயர்வுக்கான காரணம் என்ன?

வியாபாரிகள் கணித்தபடி, இதே வேகத்தில் தங்கம் விலை பயணிக்குமானால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என்ற விலையில் விற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அமெரிக்கா எடுக்கும் சில முடிவுகள், பொருளாதாரம், பங்கு சந்தைகளில் பிரதிபலிக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதே அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதால், மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. ரூ.78 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share