×
 

இனி தங்கம் வாங்குவது கனவில் தான்.. ஏறுமுகத்தில் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

நேற்று காலை, மாலை என இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை, இன்றும் சற்று உயர்ந்துள்ளது.

நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாயும், மாலை சவரனுக்கு 880 ரூபாயும் அதிகரித்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த நிலையில், இன்றும் சற்று அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,060 ரூபாய்க்கும், சவரன் 72,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: 57500 கிலோ தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கி.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க - எவ்ளோ?

தங்கம் விலை நிலவரம் (03/06/2025): 

இன்றைய நிலவரப்படி, (செவ்வாய்க்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 080 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 22 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 906 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து 79 ஆயிரத்து 248 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை அதிகரித்த நிலையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து, 111 ரூபாய் 10 காசுகளுக்கும், கிலோவிற்கு ரூ.100 அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இன்று சற்று உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share