இன்று சற்று உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா..?
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,895 ரூபாய்க்கும், சவரன் 71,160 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (30/05/2025):
இன்றைய நிலவரப்படி, (வெள்ளிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொடர் சரிவில் தங்கம் விலை.. இல்லத்தரசிகள் ஹேப்பியா ஹேப்பி..!
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 27 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 731 ரூபாய்க்கும், சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 848 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை அதிகரித்த நிலையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி, நேற்றைய விலையான ஒரு கிராம் 110 ரூபாய் 90 காசுகளுக்கும், கிலோ ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாள் ஹேப்பி நியூஸ்.. தங்கம் வாங்க ரெடியா மக்களே..!