AI செய்யும் புரட்சி..!! இந்திய IT நிறுவனங்களுக்கு ஆப்பு..!! நிஃப்டி IT பங்குகள் பெரும் சரிவு..!!
AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
2025-ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி, டீப்சீக் உள்ளிட்ட பல முன்னணி AI மாடல்கள் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால், பல துறைகளில் AI-ஐ பயன்படுத்தி பணிகளை விரைவாகவும் திறமையாகவும் மேற்கொள்ளும் போக்கு அதிகரித்தது.
குறிப்பாக, நிறுவனங்கள் தங்கள் அன்றாட செயல்பாடுகளை AI உதவியுடன் எளிதாக்கத் தொடங்கின. இந்த AI புரட்சியால், மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப மற்றும் அலுவலக வேலைகள் ஆபத்தில் சிக்கின. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. AI-ஆல் தானியங்கு மயமாக்கப்பட்ட பணிகள் அதிகரித்ததால், சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை குறைத்து, AI-க்கு முன்னுரிமை அளித்தன.
இதையும் படிங்க: தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!! வெள்ளி ரேட்டில் ட்விஸ்ட்..!! நகை கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!!
இதனால், பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு, தொழிலாளர் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தியாவின் IT துறையும் இதன் தாக்கத்தை கடுமையாக உணர்ந்தது. Wipro, TCS, Infosys, L&T Tech Services உள்ளிட்ட முன்னணி IT சேவை நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன. Nifty IT இன்டெக்ஸ் சமீப காலங்களில் 5% அளவுக்கு வீழ்ச்சியடைந்து, பல மாதங்களில் இல்லாத அளவு குறைந்த நிலையை எட்டியது.
சில நாட்களில் இன்டெக்ஸ் 4-7% வரை சரிந்து, துறையின் மொத்த மதிப்பில் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. குறிப்பாக, அமெரிக்காவை சேர்ந்த 'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தின் Claude AI-யின் புதிய பதிப்பு மற்றும் Claude Cowork போன்ற ஏஜென்டிக் டூல்களின் அறிமுகம் IT துறையை கலக்கியது. இந்த AI அமைப்புகள் சட்ட ஆவணங்கள் ஆய்வு, இணக்க சோதனை, தரவு பகுப்பாய்வு, விற்பனை முன்னறிவிப்பு உள்ளிட்ட பல சிக்கலான பணிகளை தானாகவே செய்து முடிக்கும் திறன் கொண்டவை.
இதனால், பாரம்பரியமாக இந்திய IT நிறுவனங்கள் வழங்கி வந்த அவுட்சோர்சிங் சேவைகளுக்கு மாற்றாக AI-ஐ பயன்படுத்தும் போக்கு வலுப்பெற்றது. முன்பு பெரிய அளவிலான மனித பணியாளர்கள் தேவைப்பட்ட பணிகள் இப்போது AI-ஆல் விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளப்படுவதால், வாடிக்கையாளர்கள் பெரிய அளவிலான ஊழியர்களை நியமிக்கும் தேவை குறைந்துள்ளது. இது IT நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆய்வுகள் AI-ஆல் 9-12% வரை துறை வருவாய் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கின்றன.இருப்பினும், சில நிபுணர்கள் AI-ஐ எதிரியாக இல்லாமல் வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்கின்றனர். AI-ஐ தங்கள் சேவைகளில் இணைத்து, திறமையை அதிகரித்து, புதிய வணிக மாதிரிகளை உருவாக்கினால் IT நிறுவனங்கள் மீண்டு வரலாம்.
ஆனால், தற்போதைய சூழலில் AI-யின் வேகமான வளர்ச்சி IT துறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இத்துறை, அடுத்த சில ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சற்று உயர்ந்த தங்கம் விலை..!! ஆறுதல் கொடுக்கும் வெள்ளி ரேட்..!! இன்றைய நிலவரம்..!!