×
 

2030க்குள் பி.எஸ்.7 அமலுக்கு வரும்?! மத்திய அரசு திட்டம்?! கால அவசாகம் கேட்கும் வாகனத்துறை!

வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகைகளை கட்டுப்படுத்த, 'பி.எஸ்., 7' என்ற பாரத் ஸ்டேஜ் 7 உமிழ்வு விதிமுறைகளுக்கான வரைவை நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு, வெளியிட இருப்பதாகவும், 2030க்குள் அது அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசு மற்றும் நச்சு புகைகளை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய ‘பாரத் ஸ்டேஜ் 7’ (BS-7) உமிழ்வு விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கான வரைவு நடப்பு நிதியாண்டிலேயே வெளியிடப்படலாம் என்றும், 2030-க்குள் அவை நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் 2020-ஆம் ஆண்டு முதல் BS-6 உமிழ்வு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது அதைவிட கடுமையான சுற்றுச்சூழல் தரநிலைகளை கொண்ட BS-7 விதிமுறைகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அமலுக்கு வரவுள்ள ‘யூரோ 7’ தரநிலைகளுக்கு இணையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் மற்றும் மாசு துகள்களுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (11-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

இதற்காக வாகன உற்பத்தியாளர்கள் மேம்பட்ட மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள், நவீன உமிழ்வு கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சோதனை நடைமுறைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

அரசு வெளியிடும் வரைவு அறிவிப்புக்கு பிறகு, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், வாகனங்களை மேம்படுத்தவும் உற்பத்தியாளர்களுக்கு சுமார் மூன்று ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சில வாகன உற்பத்தியாளர்கள் இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

BS-7 விதிமுறைகள் அமலுக்கு வந்தால், வாகன உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்ஜின் வடிவமைப்பு, மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள், உதிரிபாகங்கள் மற்றும் சோதனை கட்டமைப்புகளில் பெரிய முதலீடுகள் தேவைப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில், இந்த மாற்றம் மின்சார வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவின் வாகனத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய நடவடிக்கையாக BS-7 விதிமுறைகள் பார்க்கப்படுகின்றன.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (10-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி ரீதியாக ஏற்றம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share