×
 

திருப்பதிக்கு போறீங்களா..?? பக்தர்கள் கவனத்திற்கு..!! வரும் 16ம் தேதி முதல் வருகிறது புது ரூல்ஸ்..!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் புதிய நடைமுறை வரும் என TTD அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சார்பில் ஏழுமலையான் தரிசனத்தை மேலும் ஒழுங்குபடுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் (Special Entry Darshan - SED) டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும், இலவச தர்ம தரிசனத்திற்கான ஸ்லாட்டட் சர்வ தரிசனம் (Slotted Sarva Darshan - SSD) டோக்கன் பெற்றவர்களுக்கும் கடுமையான நேர ஒழுங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதுவரை ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் அல்லது SSD டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வந்த பக்தர்களை தேவஸ்தான அதிகாரிகள் பொதுவாக அனுமதித்து வந்தனர். இதனால் நேர ஒழுங்கு தவறியவர்களுடன் சேர்ந்து வரிசை நீள்ந்து, குறிப்பிட்ட நேரத்தில் வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்பாக குழந்தைகள், முதியோர், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த சிரமங்களை களையும் வகையில் தேவஸ்தானம் இப்போது முடிவெடுத்துள்ளது. இனி ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ வரும் பக்தர்களை தரிசன வரிசையில் அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பிட்ட ஸ்லாட் நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதனால் வரிசை சீராக நகர்ந்து, அனைவருக்கும் சிரமமின்றி தரிசனம் கிடைக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருப்பதிக்கு போறீங்களா..?? இந்த தேதியில் ஏழுமலையானை தரிசிக்க முடியாது..!! தெரிஞ்சிக்கோங்க..!!

பக்தர்கள் தங்கள் டிக்கெட் அல்லது டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதி மார்ச் 16 முதல் அமலுக்கு வருவதால், அனைத்து பக்தர்களும் திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இந்த மாதம் 24ஆம் தேதி காலை வெளியிடப்பட உள்ளன. அதே நாள் பிற்பகலில் திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் தொடங்கும். 

இத்தகைய டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைப்பதால், 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். நேரடியாக வந்து ரூ.50 தரிசனம் போன்ற வசதி இப்போது இல்லை என்பதால், தர்ம தரிசனம் அல்லது நடைபாதை தரிசனத்தை தேர்வு செய்பவர்கள் SSD டோக்கன் பெற்று வர வேண்டும். இதனிடையே, மார்ச் 13ஆம் தேதி (நாளை மறுநாள்) திருமலை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோயில் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மூலவர் சன்னதி, சுவர்கள், தூண்கள், மேற்கூரை, பூஜை பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் சுத்தம் செய்யப்படும். இந்த நேரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பூஜைகள் முடிந்த பின்னரே சுவாமி தரிசனம் தொடங்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையான் தரிசனம் என்பது பக்தர்களின் ஆன்மீக பயணத்தில் மிக முக்கியமானது.

கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், தேவஸ்தானத்தின் இத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும். எனவே பக்தர்கள் நேரத்தை மதித்து, திட்டமிட்டு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏழுமலையானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

இதையும் படிங்க: திருப்பதிக்கு போறீங்களா..!! பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க..!! புதிய கட்டுப்பாடுகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share