நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!
நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பெருமைக்குரிய பழமையான சிவாலயங்களில் தலைசிறந்ததாக விளங்கும் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி மாதப் பெருந்திருவிழா இன்று (சனிக்கிழமை) பக்தி பரவசத்துடன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற இந்தத் திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாகும். கோயில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு, சுவாமி நெல்லையப்பருக்கும் அம்மன் காந்திமதியம்மனுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து தங்கப் சப்பரத்தில் இருவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவிழா மண்டபத்தைச் சென்றடைந்தனர். பெரிய தங்கக் கொடிமரத்தின் முன்பாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று, கொடிப் பட்டத்துக்கு மங்கள ஆராதனைகள் செய்யப்பட்டன. வேத மந்திரங்கள் ஒலிக்க, பஞ்சவாத்தியங்கள் இசைக்க, பக்தர்களின் மங்கள ஆரவாரத்துடன் பெரிய தங்கக் கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு, பால், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட புனிதப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன்பின் சுவாமிக்கு சுவடச உபச்சார மகாதீப ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்று பேரானந்தம் அடைந்தனர். பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், தமிழகத்தின் பண்டைப் பாண்டியர் காலத்து சிற்பக்கலைக்கு சான்றாகத் திகழ்கிறது. சுவாமி நெல்லையப்பரும் அம்மன் காந்திமதியம்மாளும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளனர். இது தமிழர்களின் பக்தி பண்பாட்டைப் பிரதிபலிக்கும் முக்கிய தலமாகும். திருவிழாவின் போது பல்வேறு வாகன உலாக்கள் நடைபெறும்.
இதையும் படிங்க: களைகட்டும் நெல்லையப்பர் கோவில்..!! விநாயகர் சன்னதியில் கோலாகலமாக கொடியேற்றம்..!!
இக்கோயிலின் திருத்தேரோட்டம் ஆசிய அளவில் புகழ்பெற்றது. குறிப்பாக, சுவாமி நெல்லையப்பரின் பிரம்மாண்டத் தேர் ஆசியாவிலேயே மிக அதிக எடை கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர் உள்ளிட்ட ஐந்து தேர்கள் ரதவீதிகளில் வலம் வரும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து புனித ஊர்வலத்தை நிறைவு செய்வார்கள்.
இந்த ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்: ஜூன் 23 அன்று சுவாமி - அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், ஜூன் 27 அன்று தங்கச் சப்பரத்தில் கங்காள நாதர் வீதியுலா, ஜூன் 28 அன்று திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. கோயில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்புப் பணிகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளைச் செய்துள்ளது.
திருவிழா முழுவதும் கோயில் பகுதியில் பக்தி மயமான சூழல் நிலவுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தப் புனித விழாவில் கலந்துகொண்டு சுவாமியின் அருளைப் பெற எதிர்பார்க்கின்றனர். இந்த ஆணி திருவிழா திருநெல்வேலியின் சமயப் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் மாபெரும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (20-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!