அமித்ஷா தகுதியற்றவர்..! அருவருப்பு.. அப்பட்ட பொய்.. திமுக ராஜா கடும் தாக்கு..!
திமுக அளித்த வாக்குறுதிகள் குறித்து விவாதிக்க தயார் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆராசா சவால் விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; அமித்ஷாவின் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது கிடையாது. அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள அமைச்சரின் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித்ஷா சுமத்தியுள்ளார் எனக் கூறினார்.
நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து அப்பட்டமான பொய்களை அமித் ஷா பேசியுள்ளார். அருவருப்பான, வஞ்சகம் நிறைந்த, மாநிலத்தை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார். அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதவாத பிளவை உண்டாக்கும் வகையில் பேசுகிறார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எத்தனை கொலைகள் நடந்தாலும் திமுக அரசு இன்னும் திருந்தல..! எடப்பாடி ஆவேசம்..!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டு பேசியுள்ளார். நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு நான்கு மடங்கு வருவாய் கிடைத்துள்ளது. திமுகவை பார்த்து ஷாக் அடித்துதானே அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். பிரதமர் எதற்காக ஐந்து முறை தமிழகம் வரவேண்டும்., உங்களைப் பார்த்து சிரிப்பு தான் வருகிறது என பேசினார்.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி ஒன்றுதான் பாக்கி. மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும் மாநில நிதியில் இருந்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. 98.5 % வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.திமுக அரசின் வாக்குறுதிகள் குறித்து விவாதிக்க தயார் என ஆ ராசா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையா? எவ்வளவு துணிச்சல்.. கொந்தளித்த அமித்ஷா..!