கொஞ்சம் கூட நன்றி இல்லையா? என் தலைவர் மேல கை வச்சு பாருங்க... ஆதவ் அர்ஜுனா ஆவேசம்...!
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. தலைவர் விஜய் கூட்டத்தில் கலந்து கொண்டார். பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் 9 மணி நேரம் அழுததாக தெரிவித்தார்.
மக்கள் உணர்வை வைத்து அரசியல் செய்வது தமிழக வெற்றிக்கழகம் கிடையாது என்றும் கரூர் மக்கள் உயிரிழந்த அந்த 30 நாட்களும் கண்ணீர் சிந்தியது மட்டுமில்லாமல் அவர்களை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட வெளியிடாதவர் விஜய் என்றும் சுட்டி காட்டினார்.
தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் மக்கள் தமிழக வெற்றிக்கழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், கூட்டத்திற்கு பத்தாயிரம் பேர் வருவார்கள் என்று சொல்ல முடியுமே தவிர நிர்வாகிகளால் எவ்வளவு பேர் வருவார்கள் என்று எப்படி கணிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பினார். இவையெல்லாம் உளவுத்துறைக்குத் தெரியாதா என்று கேட்ட ஆதவ் அர்ஜுனா, இது தெரியவில்லை உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் என காட்டமாக பேசினார்.
இதையும் படிங்க: வன்மத்தை கக்கிட்டீங்க முதல்வரே..! தோல்வி அறிக்கை ரெடியா! போட்டி தரமா இருக்கும்… விஜய் ஃபயர் ஸ்பீச்…!
சட்டமன்றத் தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே விஜய், உங்களுக்கு நன்றி இல்லையா என்றும் தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம் என்று பேசினார். முதலில் அவர் வீட்டிற்கு செல்லுங்கள் என்றும் ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள் எனவும் இளைஞர் புரட்சி 2026ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 4 முனை போட்டி! தவெக தலைமையில் தான் கூட்டணி...! யாருக்கு பாதகம்?.