×
 

Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

அகமதாபாத் PG விடுதி மொட்டை மாடியில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் பாதுகாப்பு காவலர் கைது. 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் அதிரடி தேடுதல் நடத்தினர்.

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் மொட்டை மாடியில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பாதுகாப்பு காவலராக பணியாற்றிய தர்மசிங் என்பவரை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்துள்ளனர்.

அகமதாபாத் ஆனந்த்நகர் பகுதியில் உள்ள பேயிங் கெஸ்ட் விடுதியில் 23 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தங்கி, குஜராத் பல்கலைக்கழகத்தில் இன்டீரியர் டிசைனிங் படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் அவர் விடுதியின் மொட்டை மாடிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த பாதுகாப்பு காவலர் தர்மசிங், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அவர் தப்பிக்க முயன்றபோது தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு லிப்ட் கொடுத்து பாலியல் வன்கொடுமை! வனப்பகுதிக்குள் நடந்த கொடூரம்! ஆந்திராவில் பரபரப்பு!

பின்னர் மாணவி உதவி கேட்டு சத்தமிட்டுள்ளார். இதைக் கேட்ட விடுதி நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஆனந்த்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதும், அகமதாபாத் குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து 10 தனிப்படைகளை அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சந்தேக நபர் லிப்ட் மூலம் மொட்டை மாடிக்கு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்ததாக போலீசார் கூறினர்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் தர்மசிங் கைது செய்யப்பட்டார். அவர் உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், சம்பந்தப்பட்ட விடுதியில் பாதுகாப்பு காவலராக பணியில் சேர்ந்து சில நாட்களே ஆகியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, காவலரை பணியில் சேர்த்த பாதுகாப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, பணியில் அமர்த்துவதற்கு முன் அவரது பின்னணி முறையாக சரிபார்க்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீதிபதியின் போட்டோ வைத்து சுடுகாட்டில் ‘சூனியம்’! ஜாமினுக்காக ‘மாந்திரீகம்’! சிக்கியது அதிர்ச்சி ஆதாரங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share