×
 

அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

தன்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலன் மீது அண்ணா பல்கலை. மாணவி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவியை மர்மநபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படைகளை அமைத்து அந்தக் கொடூரனை தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர், சம்பவம் நடந்த தினத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் இருந்தது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக, ஞானசேகரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவி, வீடியோ கால் மூலமாக ஞானசேகரனை சரியாக அடையாளம் காட்டினார். இதன் தொடர்ச்சியாக, ஞானசேகரனை போலீசார் டிசம்பர் 26-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை போலீசார் காப்பாற்ற முயல்வதாகவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பின்னர், ஞானசேகரன் ஒருவரை செல்போனில் அழைத்து, 'சார்' எனக் கூறி பேசியதாக தகவல் வெளியானதால், 'யார் அந்த சார்' எனக் கேட்டும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் வெடித்தன.

இதையும் படிங்க: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு... கட்டணத்தில் மாற்றமில்லை! அமைச்சர் திட்டவட்டம்..

பின்னர், ஞானசேகரனிடம் விசாரணை நடத்த 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில், அடுத்தடுத்த கட்டங்களாக அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சியங்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தனது முன்னாள் காதலனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் காதலை துண்டித்த அண்ணா பல்கலை மாணவியிடம், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து மிரட்டிய ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் காதலன் நடவடிக்கை சரியில்லாததால் காதலை துண்டித்த மாணவி கூறினார். மேலும் அண்ணா பல்கலை. வளாகத்தின் உள்ளே புகுந்து மாணவியை தாக்கியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.  அதேசமயம் மாணவி தனது காதலை துண்டித்ததால், மிரட்டியதாக ராம்குமார் போலீசாரிடம் கூறியுள்ளார். முன்னாள் காதலன் ராம்குமார் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரிடம் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share