×
 

திருப்பதி செல்லும் பக்தர்களே உஷார்... தேவஸ்தானம் வெளியிட்ட அதி முக்கிய எச்சரிக்கை...!

ஏழுமலையா கோயில் படங்கள் மற்றும் தேவஸ்தானத்தின் பெயர் சட்டவிரோதமாக போலி வலைத்தளங்களை உருவாக்கி பக்தர்களை தவறாக வழிநடத்த பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் போலி வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க்வும் டிக்கெட் முன்பதிவுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்  தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கும் திருமலையில்  அறைகள் பெற்று தருவதாக உறுதியளித்து பக்தர்களை ஏமாற்றும் இடைதரகர்கள் மற்றும் போலி வலைத்தளங்கள் குறித்து விழுப்புடன் இருக்க வேண்டும் என தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கேரளாவைச் சேர்ந்த  சி.கே. சுரேஷ் பாபு என்ற பக்தர் “கர்நாடக பிரவாசி சௌதா” என்ற பெயரில் திருமலையில் அறைகளை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி ஒருவரால் ஏமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசுக்கு வந்த புகாரைத் தொடர்ந்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறை முழுமையான விசாரணையை மேற்கொண்டுள்ளது.

விசாரணையின் போது, ​​ஏழுமலையா கோயில் படங்கள் மற்றும் தேவஸ்தானத்தின் பெயர் சட்டவிரோதமாக போலி வலைத்தளங்களை உருவாக்கி பக்தர்களை தவறாக வழிநடத்த பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. இந்த போலி வலைத்தளங்கள் கூகிள் தேடல்களில் கண்டறியப்பட்டு, ஆன்லைன் பணம் செலுத்தும் வடிவத்தில் பக்தர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டு மோசடி செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: மோடி தமிழகம் வரட்டும்?! அப்புறம் பேசிக்கலாம்? கூட்டணி ஆட்சியா? நயினார் நாகேந்திரன் சூசகம்!

இந்த சூழலில், போலி வலைத்தளங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேவஸ்தான தகவல் தொடர்பு துறை மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரம் இல்லாமல் தேவஸ்தானத்தின்  சின்னங்கள் மற்றும் கோயில் படங்களைப் பயன்படுத்தும் வலைத்தளங்கள் மீது பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் தரிசனம், தங்குமிட அறைகள் மற்றும் சேவை டிக்கெட்டுகளை பெற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பக்தர்கள் விழிப்புடன் இருக்கவும், மோசடி வலைதளத்தில் சிக்காமல் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை உடனடியாக தேவஸ்தானத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவும்  என கேட்டுக் கொண்டுள்ளனர்.


 

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் எப்போவும் எங்களுக்கே சொந்தம்!! ஆக்கிரமிப்பு பகுதியை காலி பண்ணிடுங்க! பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய இந்தியா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share