×
 

இனி Towel Culture-க்கு நோ! அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!

அதிகாரத்தின் அடையாளமான டவள் கல்ட்சரை பின்பற்றக் கூடாது என நாற்காலியில் வெள்ளை துண்டு போடும் கலாசாரத்தை முதல்வர் விஜய் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், தனது எளிமையான பணி முறை மற்றும் சிறந்த நேர மேலாண்மையால் தலைமைச் செயலக அதிகாரிகளை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பதவியேற்ற நாள் முதல் ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போலவே காலையிலேயே தலைமைச் செயலகத்துக்கு வரும் விஜய், மதிய உணவையும் வீட்டில் இருந்து பாக்ஸில் எடுத்து வரும் வழக்கத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்த எளிய பழக்கம் தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் துல்லியமான நேர மேலாண்மைக்கு பெயர் பெற்ற அவர், அரசு நிர்வாகத்திலும் அதே ஒழுங்கை கடைப்பிடிப்பது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசாரை வியக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் விஜய்! எஸ்.பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி! இன்னும் 3 நாளில் தவெக அமைச்சரவை விரிவாக்கம்!

முந்தைய முதலமைச்சர்கள் கோட்டைக்கு வரும் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமங்களுக்கு மாறாக, விஜய் சீக்கிரமே வந்து விடுவதால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோதும் எந்த பந்தாவும் இன்றி எளிமையாக செயல்படும் அவரது பாணி தலைமைச் செயலகத்தில் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

மேலும், அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் “வெள்ளை துண்டு” (டவல் கல்ச்சர்) பழக்கத்தையும் முதலமைச்சர் விஜய் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். நாற்காலியில் வெள்ளை துண்டு போடும் வழக்கத்தை அகற்றியது தலைமைச் செயலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தின் சின்னங்களை குறைக்க வேண்டும் என முன்பே கோரிக்கைகள் எழுந்த நிலையில், அவரது இந்த முடிவு பலரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய், தனது எளிமை மற்றும் ஒழுக்கத்தால் மக்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும் நல்ல மதிப்பைப் பெற்று வருகிறார். “எளிமைதான் உண்மையான பெருமை” என்பதை நடைமுறையில் காட்டும் அவரது செயல்பாடுகள், புதிய அரசுக்கு சாதகமான தொடக்கத்தை கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

முதலமைச்சர் விஜய்யின் இந்தப் பணி பாணி, அரசு இயந்திரத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் இவரது வருகைக்குப் பிறகு அதிகாரிகளிடையேயும் நேர ஒழுங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் விஜய்! எஸ்.பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி! இன்னும் 3 நாளில் தவெக அமைச்சரவை விரிவாக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share