முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!
பெண்ணை கொன்று, அவசரமாக அடக்கம் செய்ய முயன்ற கும்பலில், கணவர் மற்றும் உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு டெல்லியில் இளம்பெண்ணை கொன்று, அவசரமாக அடக்கம் செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ஹரிநகர் பகுதியில், இளம்பெண் ஒருவரின் உடலை ஊர்வலமாகத் தூக்கிச் சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் முயன்றனர்.
அப்போது போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அந்தப் பெண் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், உடலை விரைவாக அடக்கம் செய்ய முயற்சிப்பதாகவும் தெரியவந்தது.
உடனடியாகச் செயல்பட்ட போலீசார், ஊர்வலத்தை மறித்து உடலைப் பறிமுதல் செய்தனர். உடலைத் தூக்கிச் சென்ற கணவரையும் உறவினர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது.
இதையும் படிங்க: காங்., தலைவர் படுகொலை வழக்கு! 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!
அந்தப் பெண்ணுக்கும் அவரது மைத்துனருக்கும் முறை தவறிய காதல் இருந்ததாகவும், இதை கண்டித்தும் அவர் கேட்காததால், கணவர் பல நாட்கள் அவரை தனியறையில் பூட்டி வைத்து கொடூரமாக அடித்துக் கொன்றதாக உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.
போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அந்தப் பெண் மூச்சுத் திணறலால் இறந்தது உறுதியானது. இதையடுத்து, கொலை செய்த கணவர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்ணுக்கு எதிரான வன்முறை மற்றும் குடும்பத்தில் நடைபெறும் கொடுமைகள் இன்னும் தொடர்வதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது என்று சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்கின்றனர். போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து, அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்த உறுதி பூண்டுள்ளனர்.
இதையும் படிங்க: என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!