போலீஸ் யூனிபார்மில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்?! டெல்லியை உலுக்கிய போலி ரெய்டு! பலே கொள்ளையர்கள்!!
‛அமலாக்கத்துறை அதிகாரிகளா... அவர்கள் ஏன் யூனிபார்மில் வரப்போகிறார்கள். அதுவும் போலீஸ் யூனிபார்மில்’ என்று பேரன் கேள்வி எழுப்புவதற்குள், 3 பேரும் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பினர்.
பிப்ரவரி 11-ம் தேதி மதியம் சபர்வால் வீட்டுக்கு போலீஸ் உடையில் 3 ஆண்கள் வந்தனர். “அமலாக்கத்துறையில் இருந்து வருகிறோம். வீட்டை சோதனை செய்ய வேண்டும்” என்று கூறினர். சபர்வால் “எங்கள் வீட்டில் ஏன் சோதனை? எந்த தவறும் செய்யவில்லையே” என்று கேட்டபோது, “இது எங்கள் கடமை. யாரும் தொந்தரவு செய்யக்கூடாது” என்று எச்சரித்தனர்.
குடும்பத்தினரை ஒரு அறையில் உட்கார வைத்து வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சோதனை நடத்தினர். பணம், நகை, வாட்ச்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டனர்.
அப்போது சபர்வாலின் பேரன் வீட்டுக்கு வந்தான். “என்ன நடக்கிறது?” என்று கேட்டபோது, “அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று கூறி பணம், நகை எடுத்துச் செல்கிறார்கள்” என்று குடும்பத்தினர் சொன்னார்கள். உடனே பேரன் “அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏன் போலீஸ் யூனிஃபார்மில் வர வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினான். அந்த கேள்விக்குள் அவர்கள் காரில் ஏறி தப்பித்தனர்.
இதையும் படிங்க: 2 வயது பச்சிளம் குழந்தையை சீரழித்த காம கொடூரன்!! தாயின் தகாத உறவு!! பிஞ்சுக்கு நடந்த அதிர்ச்சி! திமுக பிரமுகர் கைது!
சந்தேகம் உறுதியானதும் குடும்பத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சந்தேக கொள்ளை வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். தப்பிய காரின் போக்குவரத்தை தொடர்ந்து 350 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். கார் உத்தரப் பிரதேசம் காசியாபாத் வைஷாலி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அங்குள்ள செல்போன் டவர்களில் பதிவான எண்களை பகுப்பாய்வு செய்தபோது, சபர்வால் வீட்டுக்கு அடிக்கடி போன் செய்த இரு பெண்களின் எண்கள் தெரிய வந்தன – ரேகா தேவி மற்றும் பூஜா ராஜ்புட். ரேகா தேவி சபர்வால் வீட்டு வேலைக்காரி. பூஜா ராஜ்புட் அவளது அண்ணி. இருவரும் கொள்ளைக்கு திட்டமிட்டதாக உறுதியானது.
ரேகா தேவியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரித்தபோது அவள் உண்மையை ஒப்புக்கொண்டாள். சபர்வால் வீட்டில் பணம், நகை அதிகம் இருப்பதை அறிந்து, பூஜா ராஜ்புட் மூலம் 3 பேரை தொடர்பு கொண்டாள். அவர்களில் ஒருவர் இந்தோ-திபெத்தியன் எல்லைப் படையில் பணியாற்றுபவர் பிரகாஷ். மற்ற இருவர் மணிஷ், உப்டேஷ் – முன்னாள் ராணுவ வீரர்கள்.
இவர்கள் மூவரும் போலீஸ் யூனிஃபார்ம் அணிந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று நடித்து ரெய்டு நடத்தினர். ரேகா தேவி பணம், நகை இருக்கும் இடங்களை முன்கூட்டியே தெரிவித்திருந்தாள்.
கொள்ளை முடிந்ததும் மூவரும் பூஜா ராஜ்புட் வீட்டுக்கு சென்று பொருட்களை மறைத்து வைத்தனர். சில வாரங்கள் கழித்து பங்கு பிரிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீசார் ரேகா தேவி, பூஜா ராஜ்புட்டை கைது செய்து வாக்குமூலம் பெற்றனர். பூஜா வீட்டில் இருந்து நகை, வாட்ச், போலீஸ் யூனிஃபார்ம் ஆகியவற்றை கைப்பற்றினர்.
இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேரடியாக ஈடுபட்ட 3 பேரும் தலைமறைவு. டெல்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். வீட்டு வேலைக்காரி மூலம் நடந்த இந்த கொள்ளை டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்.. களமாடும் கட்சிகள்... தவெக செயல்வீரர்கள் கூட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு..!!