#BREAKING: 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை... உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை..! அரசியலில் பரபரப்பு..!!
தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்று முடிவடைந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் போதாமல் இருந்ததால் கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்ட சூழலில், பல்வேறு காரணங்களால் சில தொகுதிகள் காலியாகின. இதனால் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே முன்னேற்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
இந்த இடைத்தேர்தல்கள் முக்கியமாக அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் த.வெ.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இரட்டை உறுப்பினர் பதவியில் ஒன்றை ராஜினாமா செய்ததால் ஏற்பட்டவை. இந்த ராஜினாமாக்கள் மே மாதத்தில் நடைபெற்றன, அதன்பின் அந்தத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கான தயாரிப்புகளைச் செய்து வருகிறது.
திருச்சி கிழக்கை அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்து ராஜினாமா செய்தனர். அவர்கள்: மதுராந்தகம் (எஸ்.சி.) தொகுதியின் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியின் எஸ். ஜெயக்குமார், தாராபுரம் (எஸ்.சி.) தொகுதியின் பி. சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதியின் இசக்கி சுப்பையா. இவர்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் சேர்ந்தனர். சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த தொகுதிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் போலீஸ் ஏற்பாடுகள், வாக்காளர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் உயர் நீதிமன்றம் இந்த அதிரடி ஆணையை வழங்கி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 31ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி முதல்வர், தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!