×
 

திமுக-காரங்க கிட்ட இருந்து பெண்களை காப்பாத்தனும்... முதல்வரை பந்தாடிய EPS...!

திமுக ஒன்றிய செயலாளர் மீது வன்கொடுமை குற்றச்சாட்டு முன் வைத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக ஒன்றிய செயலாளர் ஆறு மாதமாக பெண் ஒருவரை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் நான் முக்கிய புள்ளி எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக வெளியாகும் தகவல்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார். அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த பொம்மை முதல்வர் இருக்கிறார் என்றும் சாடினார்.

இதையும் படிங்க: "மக்கள் குழப்பமடைய வேண்டாம்... அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்" - சர்ச்சைக்கு எண்டு கார்டு போட்ட தம்பிதுரை...!

தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்டப் பகலில் மாணவி கொலை... ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்குனு இருக்கு... EPS ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share