இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!! நிர்வாணமாக கிடந்த உடல்! ஈரோட்டிலா இப்படி? அதிகாலையில் மக்கள் அதிர்ச்சி!
சம்பவ இடத்தில் பதிந்திருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கவிடப்பட்டது.ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
ஈரோடு ரங்கம்பாளையம் அவுட்டர் ரிங் ரோடு மேம்பாலம் அருகே புதர் மண்டிய பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் அந்த பகுதிக்கு சென்ற சிலர், அரை நிர்வாண நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த பெண்ணுக்கு வயது சுமார் 35 இருக்கும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தலையில் பெரிய கல்லை போட்டு முகத்தை சிதைத்துள்ளனர். இது கொலைக்கு முன்பு பலாத்காரம் நடந்திருக்கலாம் என சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பவாரியா கேங்! மீண்டும் தமிழகத்தில் நுழைத்த கொடூர கும்பல்? தீரன் படம் நினைவிருக்கா?
ஈரோடு மாவட்ட எஸ்பி சுஜாதா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க விடப்பட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
சடலம் சற்று அழுகத் தொடங்கியிருந்ததால், கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெண்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கொலையாளிகளை விரைவில் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து எஸ்பி சுஜாதா உத்தரவிட்டுள்ளார். நகை கொள்ளைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என இரு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அடையாளம் கண்டறியும் பணி நடைபெறுகிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த சம்பவ இடம் ஈரோடு தாலூகா போலீஸ் நிலையத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில்தான் உள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொலையாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் விற்கப்பட்ட துப்பாக்கி!! திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! நெல்லையில் பரபரப்பு!