×
 

மனசாட்சி இருக்கா? பிரதமர் மன்னிப்புக் கேட்கணும்... போர்க்கொடி தூக்கிய கார்கே...!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் பற்றிய உரையில் ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழா பற்றி பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கார்கே வலியுறுத்தினார்.

இன்று அமலுக்கு வந்துள்ள அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் (GST 2.0) என அழைக்கப்படும் இந்த புதிய சீர்திருத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டவை. இவை பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய ஜிஎஸ்டி அமைப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு முக்கிய வரி அடுக்குகள் உள்ளன. இவை மிகவும் சிக்கலானவை எனக் கருதப்பட்டு, புதிய சீர்திருத்தங்களின் மூலம் இரண்டு முக்கிய அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட உள்ளன. இதனால், 12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% அடுக்கிற்கும், 28% அடுக்கில் உள்ள 90% பொருட்கள் 18% அடுக்கிற்கும் மாற்றப்படும். இந்த மாற்றம், பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும். மேலும், புகையிலை, பான் மசாலா, சர்க்கரை கலந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆடம்பர கார்கள் போன்ற பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 40% என்ற புதிய வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நிகழ்த்திய தனது தேசிய உரையில், ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு பேசினார். இது வெறும் வரி மாற்றம் அல்ல, ஜி.எஸ்.டி பஞ்சத் உற்சவம் என்று அழைத்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சி தரும் ஒரு பெரிய கொண்டாட்டமாக அவர் விவரித்தார். இந்த உரை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும், மத்திய வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்கும், ஆத்மநிர்பர் பாரத் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார். இந்த ஆண்டு, வரி மாற்றங்களால் மக்கள் சேமிப்பு ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று அவர் மதிப்பிட்டார். 

இதையும் படிங்க: ரூ.5,100 கோடி வளர்ச்சி திட்டம்.. நாளை திரிபுரா, அருணாச்சல பிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி..!!

8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்து விட்டு, தற்போது ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழா பற்றி பேசுவதா என பிரதமர் மோடி உரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளாசினார். ஜிஎஸ்டி மூலம் அதிக வரி வசூலித்ததற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share