×
 

Gun பாயிண்டில் பெண், 2 குழந்தைகள் கடத்தல்.. யார் அந்த கும்பல்..? ம.பி-யில் அதிர்ச்சி சம்பவம்..!

வீட்டிற்குள் புகுந்த கும்பல் துப்பாக்கி முனையில் பெண்ணையும், 2 குழந்தைகளையும் கடத்திச்சென்ற அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சந்தர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிராம் பால். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஹரிராம், கிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் இருந்தபோது, திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் நுழைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி நிற்க, உடனே அந்த கும்பல் ஹரிராமை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது மனைவி மற்றும் குழந்தைகளை கடத்தி செல்ல முற்பட்டது. 

அதனை ஹரிராம் தடுக்க முயல, ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஹரிராமை துப்பாக்கியால் சுட்டது. இதில் ஹரிராம் படுகாயமடைந்தார். பின்னர் அந்த கும்பல் ஹரிராமின் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளையும் காரில் கடத்திச்சென்றது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த ஹரிராமை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: பெண்களின் குங்குமம் தேசிய வீரத்தின் அடையாளம்! பயங்கரவாதிகளுக்கு எதிராக கர்ஜித்த பிரதமர் மோடி..!

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடத்தி செல்லப்பட்ட ஹரிராமின் மனைவி மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர். 

போலீசாரின் விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் சிங் என்பது தெரியவந்துள்ளது. தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடத்தியவர்கள் யார், அவர்கள் எதற்காக கடத்தப்பட்டார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, கடத்தி செல்லப்பட்ட ஹரிராமின் மனைவி, குழந்தைகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share