×
 

உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக உருவாக்க கோரி தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் என் அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்களில் தமிழே வழக்காடு மொழி என்பதை வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்து பேசினார். அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக உருவாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு, உத்தரவுகள், தீர்ப்பானைகள் என அனைத்தும் தமிழ் மொழியிலும் வழங்கப்பட வேண்டும் என்று தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மனுக்களை தமிழில் தாக்கல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கும் கோரிக்கையை மத்திய அரசும் குடியரசு தலைவரும் ஏற்க வேண்டும் எனவும் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். b மாநில ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை என்று கூறிய முதல்வர் விஜய், பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் பேசப்படும் மொழி தமிழ் மொழி என்றார். வருங்கால தலைமுறைக்கும் தமிழ்மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை என்று தெரிவித்த முதல்வர் விஜய், தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது எனவும் முதல்வர் விஜய் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு...எ. வ. வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share