கள்ளக்காதலுக்கு முழுக்குப் போட்ட ஜீவா... வீடு புகுந்து பிள்ளைகள் கண்முன்பே கணவனை சரமாரியாக வெட்டி சாய்த்த கள்ளக் காதலன்...!
வாணியம்பாடி அருகே கள்ளக் காதல் விவகாரம் தட்டிக் கேட்ட கணவனை வீடு புகுந்து மனைவி மற்றும் பிள்ளைகள் கண் முன்னே வெட்டிய கள்ளக் காதலன்.
குன்றத்தூர் அபிராமி முதல் கிருஷ்ணகிரி பாரதி வரை கள்ளக்காதலுக்காக பிள்ளைகளை கொலை செய்வது, கணவனை கள்ளக்காதலனுடன் கூட்டு சேர்ந்து கொல்வது அல்லது தகாத உறவு தெரிந்ததால் கணவனே மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் வாணியம்பாடியில் கணவன் பேச்சை கேட்டு கள்ள உறவை கைவிட்ட மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் கண்முன்னே கள்ளக்காதலன் கணவனை வெட்டி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ், இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள், மற்றும் 2 வயதில் ஒரு மகன், என இரு குழந்தைகள் உள்ள நிலையில், ஜீவா திருமணத்தை மீறி பிரேம்குமார் என்ற வாலிபருடன் உறவில் இருந்து உள்ளார்.
இதனை அறிந்த ஜீவாவின் கணவர் அப்பன் ராஜ் சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஜீவா பிரேம்குமார் உடனான உறவை துண்டித்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் நேற்று நள்ளிரவு அப்புன்ராஜ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற பிரேம்குமார் அப்புன் ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்புன் ராஜை சரமாரியாக தாக்கி உள்ளார் .
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் ரொம்ப கவலைப்பட்டாரு!! பிபிசி மன்னிப்பு கேட்குமா? கரோலின் லீவிட் விளக்கம்!
இதில் தலை உள்ளிட்ட ஐந்து இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு அப்புன் ராஜ் உயிருக்கு போராடினார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்து பிரேம்குமார் அங்கிருந்து தப்பித்தார்.
இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த அப்புன் ராஜ்ஜை
சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீசார் தப்பி ஓடிய பிரேம்குமாரை தேடி வருகின்றனர், கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் கண் முன்னே கணவன் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை... இத செஞ்சே ஆகணும்! திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்...!