×
 

ரவுடி கொலையில் இளம் பெண் கைது... குடும்பமே சேர்ந்து செய்த சதி... ‘மனைவிகளுக்கு’ வலைவீச்சு...!

ரவுடி கொலையில் இளம் பெண் கைது. குடும்பமே சேர்ந்து திட்டமிட்டு ரவுடியை கொலை செய்தது அம்பலமானது. 

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ரவுடி மதுரை வீரனை பழிக்கு பழியாக கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு ரவுடி மற்றும் அவர் குடும்பம் தப்பி சென்ற நிலையில் கொலையில் தொடர்புடைய ரவுடி மாரியப்பனின் சகோதரி ஐஸ்வர்யா( 19) என்ற இளம் பெண்ணை குமரி போலிஸார் கைது செய்தார்கள்.மேலும் கொலையாளிகளான மாரியப்பன்,மாரியப்பன் தாய் நாச்சியார் மணைவிகள் லெட்சுமி, சரண்யா  ஆகியோரை போலிஸார் தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டம் மயிலாடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மதுரைவீரன் (30).சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கு அஞ்சுகிராமம் சுசீந்திரம் எனபல்வேறு காவல் நிலையங்கள் வழக்குகள் உள்ளன. தற்பொழுது செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், சுசீந்திரம் அருகே உள்ள மறுகால்தலை காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (29) என்பவருக்கும் இடையே நட்பு இருந்துள்ளது.

மாரியப்பனும் சரித்திர பதிவேடு குற்றவாளி தான். இவருக்கும் குமரி நெல்லை மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம்  நாகர்கோவில் வந்த மதுரைவீரன்,அங்கிருந்து மாரியப்பனை சந்திக்க மறுகால்தலை காலனிக்குச் சென்றுள்ளார்.அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: துடிக்க துடிக்க கொடூரம்...!! - 5 மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்... பகீர் காரணம்...!

மது அருந்தி கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு,கைகலப்பாக மாறியுள்ளது. ​இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் மற்றும் அவர் தாய், மனைவிகள், சகோதரி என ஆறு பேர்கள் கொண்ட குடும்பமே சேர்ந்து மதுரைவீரனை அரிவாளால் கொடூரமாக வெட்டி விட்டுத் தப்பியோடினார்கள்.

பலத்த வெட்டுக்காயமடைந்த மதுரைவீரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை அடுத்து தப்பி ஓடிய கொலையாளிகளை போலிஸார் தேடி வந்தார்கள். இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய ​ரவுடி மாரியப்பனின் சகோதரி ஐஸ்வர்யா( 19) என்ற இளம் பெண்ணை குமரி போலிஸார் கைது செய்தார்கள்.மேலும் கொலையாளிகளான மாரியப்பன்,மாரியப்பன் தாய் நாச்சியார் மணைவிகள் லெட்சுமி, சரண்யா ஆகியோரை போலிஸார் தேடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை பழிவாங்க இளைஞர் செய்த காரியம்... இரு சிறுவர்களுக்கு நேர்ந்த கதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share