சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு!! 8 மாத கர்ப்பம்! 19 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!
மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரியவந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்ற 19 வயது இளம்பெண், மருத்துவ பரிசோதனையில் 8 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், 17 வயது சிறுவன் தொடர்பான புகாரில் இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், உடல்நலக்குறைவு காரணமாக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் வழக்கமான நடைமுறையின்படி அவரிடம் குடும்ப விவரங்களை கேட்டபோது, அவர் அளித்த தகவல்களில் முரண்பாடு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. அதன் பின்னர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வீ தி லீடர்ஸ் பாய்ச்சல்! கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரை மெகா திட்டம்! அண்ணாமலையின் அடுத்த அதிரடி!
மருத்துவமனைக்கு வந்த மகளிர் போலீசார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அவர் குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் விமானப் பணியாளர் தொடர்பான ஓராண்டு பட்டயப் படிப்பில் பயின்று வந்ததாகவும், அதே வகுப்பில் களியக்காவிளையைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் படித்து வந்ததாகவும் தெரியவந்தது. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது நெருக்கமான உறவாக மாறியதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறுவனின் தாயார் அளித்த புகாரில், தனது மகனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபடுத்தியதாக இளம்பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில், சிறுவன் சட்டப்படி பாதுகாக்கப்படும் வயதில் இருப்பதால், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இளம்பெண் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால், அவர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளவை புகாரின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் மட்டுமே; அவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலை? ECR-க்கு புதிய முகம்! மத்திய அரசிடம் தமிழகத்தின் புதிய கோரிக்கை!"