×
 

கேரளாவில் அதிர்ச்சி... போதைப்பொருள் கும்பலுடன் ஆசிரியைகளுக்கு நேரடி தொடர்பு! சர்வதேச நெட்வொர்க் அம்பலம்!

கேரளாவில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்த வழக்கில், சமீபத்தில் கைதான ஆசிரியைகள் மூன்று பேருக்கு, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது.

கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியைகளுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மருத்துவர்கள் உள்ளிட்ட மேலும் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து, மாநில அரசு 'ஆப்பரேஷன் தூபான்' என்ற சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் முக்கிய தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டபோது, அவர் மேற்காசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்க டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: டியூசனுக்கு வந்த மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்! பெற்றோரிடம் கதறி அழுத சிறுமிகள்!

அந்த பணம் அனுப்பப்பட்ட QR குறியீடு, கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார வள மைய ஆசிரியை காவ்யாவின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், காவ்யா, அவரது தோழி கீர்த்தனா மற்றும் மற்றொரு ஆசிரியை நீஷ்மா ஆகியோர் போதைப்பொருள் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு விசாரணைக் குழுவின் தகவலின்படி, வெளிநாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல், கீர்த்தனாவின் QR குறியீட்டை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவருக்கு ரூ.2,000 வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணம் கிடைத்ததும், போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்ட இடத்தின் இருப்பிட விவரங்களையும் புகைப்படங்களையும் வாங்குபவர்களுக்கு அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மூன்று ஆசிரியைகளும் போதைப்பொருளை பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதன் விற்பனையிலும் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. சில மருத்துவர்களும் இந்த வலையமைப்புடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 'ஆப்பரேஷன் தூபான்' நடவடிக்கையின் கீழ் கடந்த ஓராண்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7.5 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கொச்சியில் அழிக்கப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கவும், சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share