×
 

திருந்தி வாழ நினைத்த பெண்ணை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன்.. Oyoவில் உல்லாசம் அனுபவித்துவிட்டு வெறிச்செயல்..!

கர்நாடகாவின் பெங்களூரு சுப்பிரமண்யபுரா பூர்ணபிரக்யா லே - அவுட்டில் உள்ள, 'ஓயோ' ஹோட்டலில், இம்மாதம் 7ம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அந்த ஹோட்டல் ஊழியர்கள், போலீசாருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவித்தனர்.

பெங்களூருவின் புறநகரில் உள்ள கெங்கேரியை சேர்ந்தவர் ஹரிணி (33). இவருக்கு திருமணமாகி தாசேகவுடா என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் 3-வது நபர் மூலமாக ஹரிணிக்கும், தலகட்டபுராவை சேர்ந்த யசஷ் (25) என்பவருக்கும்இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது 2 பேரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டனர்.

அதன்பிறகு, 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி நண்பர்களாக மாறினார்கள். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 குழந்தைகளுக்கு தாய் என தெரிந்தும் ஹரிணியின் அழகில் மயங்கி தீவிரமாக காதலிக்க துவங்கினார் யஷாஸ். இருவரும் ஜாலியாக ஊர் சுற்றினர்.

ஓயோ ஓட்டலில் அறை எடுத்து 2 பேரும் உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர். ஹரிணி காதலனுடன் சுற்றித் திரிவதை உறவினர்கள் பார்த்து விட்டனர். 2 குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு இப்படி நீ செய்யலாமா? என உறவினர்கள் திட்டினர்.  

இதையும் படிங்க: கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ்.. காரணம் இதுதான்..!!

கணவனுக்கும் விஷயம் தெரிய வர குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் யஷாஸ் உடன் தொடர்பை விட்டு விட முடிவு செய்தார். யஷாஸ் பலமுறை போன் செய்தும் ஹரிணி அட்டென்ட் செய்யவில்லை. உறவை முடித்துக் கொள்வதாக மெசேஜ் மட்டும் அனுப்பினார். இதனால் யஷாஸ் கோபமடைந்தார். சில வாரங்களிலேயே இப்படி சொன்னால் என்ன அர்த்தம்? கடைசியாக உன்னை பார்க்க வேண்டும் என சொல்லி பெங்களூருவில் உள்ள ஒரு இடத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வரவழைத்தார்.

அங்குள்ள ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கினர். எனக்கு குழந்தைகள்தான் முக்கியம்; இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என ஹரிணி சொன்னார். அதை யஷாஸ் ஏற்கவில்லை. குழந்தைகள் இருப்பது காதலிக்கறதுக்கு முன்னாடி தெரியலையா? நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என கூறி, யஷாஸ் சண்டை போட்டுள்ளார்.

அப்போது, ஹரிணியை உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஹரிணி உடனே கிளம்பியாக வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரடைந்த யஷாஸ் ஹரிணியை கத்தியால் சரமாரி குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ஹரிணி இறந்தார். என்ன செய்வதென புரியாமல் ஒரு நாள்  ஓட்டல் அறையிலேயே இருந்த யஷாஸ், ஞாயிறன்று தப்பிச் சென்று விட்டார். 

இன்று காலை அறையில் இருந்து எந்த சத்தமும் வராததால், ஓட்டல் ஊழியர்கள் மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தபோது ஹரினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உறவை திடீரென துண்டித்ததால்  சைக்கோவாக மாறிய யஷாஸ்,  ஹரிணியின் உடலில் 17 முறை க த்தியால் குத்தி கொடூரமாக கொன்றிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. விசாரணைக்கு பின்பு நேற்று மாலையில் யசஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: அமித்ஷாவே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன? மறுப்பு சொல்லாமல் மழுப்பிய மாஜி அமைச்சர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share