×
 

கல்யாணத்துக்கு முன்னாடியே ஸ்கெட்ச் போட்டாச்சு.. 4வது முயற்சியில் நடந்தது கொலை! சோனம் பரபரப்பு வாக்குமூலம்..!

மூன்று முறை கொலை முயற்சியில் தப்பிய ராஜா ரகுவன்ஷியை நான்காவது முறையில் கொன்றதாக அவரது மனைவி சோனம் வாக்குமூலம் அளித்துள்ளார்

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் சோனம் ரகுவன்ஷி (26) தம்பதியினர், மே 11ஆம் தேதி திருமணம் முடிந்து, மே 20ஆம் தேதி மேகாலயாவிற்கு தேனிலவுக்கு புறப்பட்டனர். இன்ஸ்டாவில் பிரபலமான மேகாலயாவின் உயிருள்ள வேர் பாலங்களை (Living Root Bridges) பார்க்க வேண்டும் என்று இவர்கள் ஆசைப்பட்டனர்.

இந்தோரில் போக்குவரத்து தொழில் செய்யும் ராஜா, பயணத்தை கவனமாக திட்டமிட்டு, ஒவ்வொரு விவரத்தையும் ஆராய்ந்து தயாராக இருந்தார். சிரபுஞ்சிக்கு ஹனிமூன் சென்று அங்கு உற்சாகமாக சுற்றிப்பார்த்தனர். அங்கு ஒரு ஸ்கூட்டரை வாடகை எடுத்துக் கொண்டு சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர்.

மே 22 அன்று, இந்த தம்பதி மவுலாக்கியாட் கிராமத்துக்கு வந்து, 3,000 படிகள் இறங்கி நோங்ரியாட் கிராமத்தில் உள்ள ஒரு விருந்தினர் இல்லத்தில் (Homestay) தங்கினர். அடுத்த நாள், மே 23 காலையில், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால், குடும்பத்தினர் கவலையடைந்து, மேகாலயாவுக்கு சென்று உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து தேடுதல் வேலையை தொடங்கினர்.

இதையும் படிங்க: ஹனிமூனில் கணவனை போட்டுத் தள்ளிய சூப்பர் மனைவி..! உறைய வைக்கும் மேகாலயா கிரைம்..!

11 நாட்கள் நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஜூன் 2ஆம் தேதி, நோங்க்ரியாட் கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெய் சாடாங் நீர்வீழ்ச்சி அருகே, 100 அடி ஆழமான பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை அடையாளம் காண்பது கடினமாக இருந்தபோதிலும், ராஜாவின் கையில் பச்சைக் குத்தியிருந்த 'ராஜா' என்ற எழுத்தும், அவர் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்சும் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தின.

மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெண் ஒருவரின் வெள்ளை நிற சட்டை, உடைத்துபோன செல்போன் கவர், மாத்திரைகளும் கிடந்தன.

ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரித்தனர்.  ரகுவன்ஷியின் மனைவி சோனம் என்ன ஆனார்? அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் மாயமான சோனம், மேலும் 3 நபர்களுடன் பிடிபட்டார்.

அவர்கள் காசிப்பூர் காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, சோனமுடன் கைதான நபர்கள்தான், ரகுவன்சியை கொன்றார்கள் என்பதும், ரகுவன்ஷியை கொல்ல சோனம்தான் அவர்களை பணி அமர்த்தினார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. 

 சோனத்திற்கும் அவரது தந்தை நடத்திவரும் பிளேவுட் கடையில் வேலை செய்துவந்த ராஜ் குஷாலா என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. சோனத்தைவிட குஷாலா 5 வயது குறைவான இளைஞர் ஆவார். இந்த நிலையில் சோனத்திற்கு ராஜா ரகுவஞ்சியுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சோனம் தனது கள்ளக்காதலன் குஷாலுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். 

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது, கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்தேன். கொலை செய்த போது நேரில் பார்த்தேன்'' என மனைவி சோனம் வாக்குமூலத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தார். கொலையாளிகளின் பயணச் செலவுகளுக்காக தலா ரூ.40,000-50,000 கொடுத்து நிதி உதவி செய்தேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் மேலும் பல திடுக்கிடும் சம்பவங்கள் அவரது வாக்குமூலத்தில் இருந்து வெளியாகி  உள்ளது.

இதுகுறித்து ஷில்லாங் காவல் கண்காணிப்பாளர் விவேக் சியம் தெரிவித்ததாவது: “இந்த கொலைக்கு ராஜ் மூளையாக செயல்பட்டுள்ளார், அவருடன் இணைந்து சோனம் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். இது கூலிப்படை செய்த கொலை அல்ல. கொலையை செய்த மூவரும் நண்பர்கள், அவர்களில் ஒருவர் ராஜின் உறவினர். அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் ஒரு முறையும் ஷில்லாங்கில் ஒரு முறையும், கிழக்கு காசி மலையில் ஒரு முறையும் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். 

அந்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், வெய் சவ்டோங் அருகே மே 23 பிற்பகல் 2 மணிமுதல் 2.18 மணிக்குள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்தூரில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே, அதாவது ராஜா ரகுவன்ஷியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதே அவரை எப்படி கொலை செய்ய வேண்டும்? கொலைக்கு பிறகு சோனம் காணாமல் போனதுபோல் எப்படி நாடகமாட வேண்டும்? போன்ற திட்டங்களை தீட்டியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கணவன் கொலையை கண்குளிர பார்த்த மனைவி.. கொலைகார பத்தினி சிக்கியது எப்படி? ஹனிமூனில் நடந்த ட்விஸ்ட்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share