“அந்த மாதிரி ஆண்களே குறி...” - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!
ஓரினச்சேர்க்கை செயலி மூலமாக ஆடிட்டரை ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்து தாக்கி பணம் பறிக்க முயன்று 3 பேர் கைது செய்யப்பட்ட நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் ஆடிட்டரை கிரிண்டர் ஆப் மூலமாக வரவழைத்து தாக்கி பணம் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது. கிரிண்டர் ஆப்களை பயன்படுத்தி இளைஞர்களை வலை வீசி பிடிக்கும் கும்பல். காவல்துறையினரிடம் பிடிபட்டதன் பின்னணி என்னவென விரிவாக பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் வயது 36. இவர் இந்த பகுதியில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஆடிட்டர் வேலைகளுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
நாகராஜுக்கு கிரிண்டர் ஆப் என்னும் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய செயலியை பயன்படுத்தும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து நாகராஜன் நேற்று முன்தினம் நெல்லைக்கு ஆடிட்டர் வேலை சம்பந்தமாக வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!
அப்பொழுது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது கிரிண்டர் ஆப் செயலியை பயன்படுத்தி அருகில் யாராவது கிரிண்டர் செயலி பயன்படுத்தும் நபர்கள் இருக்கிறார்களா என தேடி இருக்கிறார்.
அப்பொழுது ஒரு நபரின் தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் நாகராஜ் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர் தரப்பில் பேசிய நபரும் சிறிது நேரத்தில் நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து நாகராஜை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள முள் காடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் சென்றதும் மூன்று பேர் வந்திருக்கின்றனர். நால்வரும் சேர்ந்து நாகராஜன் அடித்த தாக்கி அவரிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர். பணம் எதுவும் இல்லாததால் நாகராஜை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
நாகராஜ் இதுகுறித்து நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியைச் சார்ந்த கல்லூரி மாணவர்களான அருண்குமார் வயது 20, விஷ்ணு சுப்பு வயது 21, பொன்னாக்குடி பகுதியைச் சார்ந்த பூபதிராஜா வயது 20 ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
காவல்துறையினர் தற்பொழுது இந்த 3 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் கிரிண்டர் ஆப் மூலமாக ஓரினச்சேர்க்கையில் ஆர்வமாக இருக்கும் வாலிபர்களை மட்டும் குறிவைத்து இவர்கள் இரவு நேரத்தில் தனியாக அழைத்துச் சென்று வழிப்பறி மற்றும் அடித்து தாக்கும் சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
தற்போது 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு ஒருவர் மட்டும் தப்பிச் சென்றுள்ளார். அவரையும் பிடிப்பதற்காக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஓரினச்சேர்க்கை செயலி மூலமாக ஆடிட்டரை ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்து தாக்கி பணம் பறிக்க முயன்று 3 பேர் கைது செய்யப்பட்ட நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!