×
 

எனக்கே டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறியா?! ஆத்திரத்தில் கணவன் வெறிச்செயல்! அனாதையான குழந்தைகள்!

ஆள்நடமாட்டம் இருந்த பகுதியில் நடத்து சென்றுகொண்டிருந்த மகேஷ்வரியை இடைமறித்த பாலமுருகன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுள்ளார்.

பெங்களூரு நகரில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியினர் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னை கொலை வரை சென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 40) மற்றும் மகேஷ்வரி (வயது 39) தம்பதியினருக்கு 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2018-ம் ஆண்டு முதல் குடும்பத்துடன் பெங்களூருவில் குடியேறிய இவர்கள், பாலமுருகன் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றினார். மகேஷ்வரி தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பாலமுருகன், சில மாதங்களுக்கு முன்பு ஐ.டி. வேலையை ராஜினாமா செய்தார். இதனால் மனைவியை பிரிந்த மகேஷ்வரி, இரண்டு குழந்தைகளுடன் ராஜாஜிநகர் பகுதியில் தனி வீடு எடுத்து தங்கினார். கடந்த வாரம் விவாகரத்து கோரி கோர்ட் மூலம் பாலமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதையும் படிங்க: கனடாவில் இந்திய பெண் படுகொலை!! காதலனே கொலை செய்த கொடூரம்!! உலுக்கும் பின்னணி!

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், மகேஷ்வரி தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தார். நேற்று (டிசம்பர் 23) மாலை 7 மணியளவில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மகேஷ்வரியை பின் தொடர்ந்தார். 

ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்து சென்ற மகேஷ்வரியை இடைமறித்த பாலமுருகன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். படுகாயமடைந்த மகேஷ்வரியை அப்பகுதி மக்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி மகேஷ்வரி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ராஜாஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பாலமுருகன், சம்பவத்துக்குப் பிறகு போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி எங்கிருந்து வந்தது, உரிமம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

இந்த கொலை பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்னைகள் வன்முறையாக மாறுவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: ஜப்பானே அசந்து போச்சு!! இந்தியா செய்த அசத்தல் சாதனை!! இஸ்ரோ தலைவர் ருசிகர தகவல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share