சிங்கப்பெண் சிறப்பு படைக்கு பிரத்யேக சீருடை!! முதல் கையெழுத்தில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்!!
சிங்கப்பெண் சிறப்பு படைக்கு பிரத்யேக, 'லோகோ'வுடன், புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு அறிவித்துள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு படைக்கு பிரத்யேக லோகோ மற்றும் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு படை அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு வரத் தயாராகி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘சிங்கப்பெண்’ சிறப்பு படை, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது முழு அளவில் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் மற்றும் துவக்க விழா நிகழ்ச்சிக்குப் பிறகு இந்தப் படை முழுமையாகக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!
கோவை மாநகரில் இரண்டு குழுக்களும், கோவை ஊரகப் பகுதியில் ஒரு குழுவும் ஏற்கெனவே தயாராக உள்ளன. மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த சிறப்புப் படைக்கு தனியாக ஸ்டேஷன் அமைக்கப்படுமா என்பது உள்ளிட்ட செயல்பாட்டு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தப் படையின் தனித்துவத்தையும், முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பிரத்யேக லோகோவும், புதிய சீருடையும் வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லோகோ மற்றும் சீருடை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இது சிங்கப்பெண் படையினருக்கு தனித்த அடையாளத்தை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படும் இந்த சிறப்பு படை, மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் குற்றங்கள், குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் போன்ற வழக்குகளில் விரைவான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க இந்தப் படை செயல்படும்.
இந்த முயற்சி தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு, சிங்கப்பெண் சிறப்பு படையின் முழு செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Breaking News! முதல்வர் விஜய் முதல் கையெழுத்து!! அதிரடி காட்டிய ஜனநாயகனின் சர்க்கார்!!