ஐ.டி நிறுவனத்தில் அரங்கேறிய மதமாற்றம், பாலியல் அத்துமீறல்!! 25 நாட்களாக தலைமறைவாக இருந்த கும்பல் தலைவி கைது!
நாசிக்கில் உள்ள டி.சி.எஸ்., - ஐ.டி., நிறுவனத்தில் நடந்த மதமாற்றம், பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு 25 நாட்களாக தலைமறைவாக இருந்த நிடா கான் இன்று (மே 08) சத்ரபதி சம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார்.
மும்பை: மஹாராஷ்டிராவின் நாசிக் டி.சி.எஸ். (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) பி.பி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நிடா கான் இன்று (மே 8) கைது செய்யப்பட்டார். 25 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர், சத்ரபதி சம்பாஜி நகரில் போலீசாரால் பிடிபட்டார்.
நாசிக் டி.சி.எஸ். அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மீது பாலியல் அத்துமீறல் மற்றும் மதமாற்ற அழுத்தம் கொடுக்கப்படுவதாக கடந்த பிப்ரவரியில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து நாசிக் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட வேடங்களில் பெண் போலீசாரும் உள்ளிட்ட பலர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்து உண்மை நிலவரத்தை கண்டறிந்தனர்.
விசாரணையில், மலேஷியாவைச் சேர்ந்த இம்ரான் எனும் மதபோதகருடன் தொடர்பில் இருந்த சில டீம் லீடர்கள் மற்றும் ஊழியர்கள், பெண் ஊழியர்களை தொடர்ச்சியாக முஸ்லிம் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அழுத்தம் கொடுத்ததாக தெரியவந்தது.
இதையும் படிங்க: நாசிக் ஐ.டி. நிறுவனத்தில் அரங்கேறிய சதி!! பெயரை மாற்றி மலேசியா அனுப்ப திட்டம்! அம்பலமானது மதமாற்ற கொடூரம்!!
மனிதவள மேலாளராக பணியாற்றிய 25 வயதான நிடா கான் இந்த சம்பவங்களில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கண்டறியப்பட்டது. 2021-ல் டி.சி.எஸ். பி.பி.ஓ. பிரிவில் பணியில் சேர்ந்த நிடா கான் மீது 9 புகார்கள் பதிவாகின. இதையடுத்து அவர் நிறுவனத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், வழக்கு பதிவான பின்னர் 25 நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
இன்று சத்ரபதி சம்பாஜி நகரில் மறைந்திருந்த நிடா கானை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை, கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த சம்பவம் மஹாராஷ்டிரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. போலீசார் முழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதால், இந்த வழக்கில் இன்னும் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தர்பூசணியில் கலந்திருந்த எலிமருந்து!! ஒரே குடும்பத்தில் 4 பேர் மரணத்தில் விலகியது மர்மம்!