மனைவி நடத்தையில் சந்தேகம்! ஒட ஓட விரட்டி வெட்டிக் கொலை! ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்!
ஆத்திரமடைந்த அவினாஷ் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியை தாக்கினார். இதனைக் கண்ட அவரது மூத்த மகன் தாயை கொலை செய்ய வேண்டாம் என காலை பிடித்து கெஞ்சினார்.
தெலுங்கானா: ஆட்டோ ஓட்டுநரான கணவன், மனைவி வீட்டுக்கு தாமதமாக வருவதால் சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறி, அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடைபெற்றது தெலுங்கானா மாநிலம் அட்டப்பூர் அருகே உள்ள தேஜஸ்வினி நகரில். அவினாஷ் என்ற ஆட்டோ டிரைவருக்கு கோமளி (31) என்ற மனைவி இருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோமளி தேஜஸ்வினி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றியதுடன், பல வீடுகளில் வீட்டு வேலையும் செய்து வந்தார். வேலைகள் முடிந்து வீட்டுக்கு சற்று தாமதமாக வருவதால், அவினாஷுக்கு மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு அவினாஷ் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு முழுவதும் தொடர்ந்த இந்த தகராறு காலை வரை நீடித்தது.
இதையும் படிங்க: தெலுங்கானாவுக்கு வயசு 12!! பிரதமர் மோடி செஞ்சுக்கொடுத்த பிராமிஸ்! மத்திய அரசு உறுதி!
ஆத்திரமடைந்த அவினாஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி கோமளியை சரமாரியாகத் தாக்கினார். இதைப் பார்த்த அவர்களது மூத்த மகன், “அம்மாவை கொல்லாதீங்க” எனக் கதறியபடி தாயின் காலைப் பிடித்துக் கெஞ்சினான்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கோமளி, கணவரின் பிடியிலிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனால் ஆத்திரம் அடங்காத அவினாஷ் மனைவியை விரட்டிச் சென்று தொடர்ந்து வெட்டினார்.
கோமளியின் அலறல் சத்தம் கேட்ட அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் வெளியே ஓடி வந்தனர். இதைப் பார்த்த அவினாஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். அக்கம்பக்கத்தினர் கோமளியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கோமளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய அவினாஷை விரைவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திவிட்டு வந்து மனைவியை கொலை செய்த சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறையை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது! உண்மை நிலையை விளக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!