×
 

தங்கையின் காதலனை போட்டுத் தள்ளிய அண்ணன்... திருச்செந்தூர் கொலையின் பகீர் பின்னணி...!

திருச்செந்தூரில் காதல் விவகாரத்தில் பெண்ணின் அண்ணன் இளைஞரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முன்னோடியாக அறியப்படும் மாநிலமாக இருந்தாலும், சமீப நாட்களில் நிகழும் கொலை சம்பவங்கள் சமூகத்தின் ஆழமான காயங்களை வெளிப்படுத்துகின்றன. செப்டம்பர் 2025 மாதத்தின் முதல் பகுதியில் மட்டுமே, காதல் தொடர்பான ஆணவ கொலைகள், குடும்பப் பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என பல்வேறு வடிவங்களில் கொலைகள் பதிவாகியுள்ளன. இவை வெறும் தனிநபர் சம்பவங்களாக மட்டுமல்லாமல், சாதி, பாலியல், போதைப்பொருள் போன்ற சமூக பிரச்சினைகளின் பிரதிபலிப்புகளாகவும் உள்ளன. இந்தக் கொலை சம்பவங்கள், தமிழ்நாட்டின் சமூக நீதி கனவை சவால் விடுகின்றன. 

திருச்செந்தூரில் 30 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபரால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.

திருச்செந்தூரில் உள்ள ஆந்தலைப் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான மணிகண்டன். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பெண்ணை மணிகண்டன் திருமணம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் உட்பட 3 பேர் சேர்ந்து மணிகண்டனை திட்டம் போட்டு தீர்த்துக் கட்டியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: காதல் விவகாரம்... ஓட ஓட விரட்டி இளைஞரை வெட்டிய கொடூரம் ! நீதி கேட்டு போராடும் உறவினர்கள்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: திருச்செந்தூரில் பயங்கரம்... இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை... மக்கள் அச்சம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share