×
 

உலக பட்டினி தினம்..! முதல்வர் விஜய் போட்ட ஆணை... காரைக்குடியில் அமைச்சர் பிரபு அன்னதானம்..!!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலக பட்டினி தினம் (World Hunger Day) நினைவு கூறப்படுகிறது. இந்த நாள் பட்டினி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, அவற்றைத் தீர்க்க உலகளாவிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகக் கொண்டாடப்படுகிறது. பட்டினி ஒரு தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வு அல்ல.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளாலும், சமூக-பொருளாதார சமத்துவமின்மையாலும் ஏற்படும் ஒரு தீர்க்கக்கூடிய பிரச்சினை என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது. உலகில் இன்னும் பல கோடி மக்கள் நாள்தோறும் பட்டினியுடன் போராடுகின்றனர். உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் இறப்பு போன்றவை இன்னும் தீவிரமான பிரச்சினைகளாக உள்ளன.

போர், உள்நாட்டுக் கலவரங்கள், பருவநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை இந்தப் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கின்றன. உலக பட்டினி தினம் இந்த மூலக்காரணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது மற்றும் நிலையான தீர்வுகளை வலியுறுத்துகிறது. 

இதையும் படிங்க: விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை..! குவாரிகளுக்கு அமைச்சர் டி.கே. பிரபு வார்னிங்..!

இந்த நிலையில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நாளை உணவு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று பொதுமக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதல் வருமான விஜய் ஆணையிட்டுள்ளார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 2000 முதல் 3000 பேருக்கு விருந்து அளிக்க வேண்டும் என்று விஜய் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அதன்படி ஏழை எளிய அன்னதானம் வழங்கப்பட்டது. காரைக்குடியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கனிமவளத்துறை அமைச்சர் பிரபு தொடங்கி வைத்தார். ஏராளமானோருக்கு முதல்வர் விஜயின் உத்தரவுப்படி உணவு வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க: கனிம வளங்கள் மூலம் புதிய தொழில் முதலீடுகள்... முதல்வரை சந்தித்த பின் அமைச்சர் டி.கே. பிரபு உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share