×
 

அதிரடி காட்டும் சிபிஐ... வேலுச்சாமிபுரம் வணிகர்களிடம் தீவிர விசாரணை...!

கரூர் சம்பவம் தொடர்பாக வேலுச்சாமிபுரம் வணிகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது.

கரூர் கூட்ட நெரிசலில் குடும்பங்களை மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். கரூர் சம்பவத்தை விசாரிக்க முதலில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைத்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் சம்பவத்தை சிபிஐ க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இவ்ளோ பேசுறீங்களே… சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறாது ஏன்? SIR விவகாரத்தில் விஜய் சரமாரி கேள்வி…!

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் தொடங்கி உள்ளனர். இதனிடையில் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் உள்ள வணிகங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 10 வணிகர்கள் சம்மன் வழங்கப்பட்ட நிலையில் சிபி அதிகாரிகளிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளனர். 

இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டம் திமுகவின் கபட நாடகம்..! SIR- க்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share