×
 

ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணம்! பெற்றோர், மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்!

உத்தரபிரதேசத்தில், 100 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக பெற்றோர் மற்றும் மனைவியை கொன்று நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேசத்தின் மீரட்டில், 100 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக, தனது தாய், முதல் மனைவி, தந்தையை கொன்று, விபத்து போல நாடகமாடிய விஷால் சிங்கால் (37) என்ற இளைஞர், போலீஸ் விசாரணையில் சிக்கினார். 2018 முதல் 2023 வரை, தந்தை முகேஷ் சிங்கால் பெயரில் 64 இன்சூரன்ஸ் பாலிசிகள் (50 கோடி மதிப்பு) எடுத்து, தன்னையே பயனாளியாக பதிவு செய்த விஷால், இதுவரை 1.5 கோடி ரூபாய் பெற்றார். 

ஆனால் 4-வது மனைவி ஷ்ரேயாவின் புகார், இந்த மோசடி மற்றும் மூன்று கொலைகளை அம்பலப்படுத்தியது. விஷால் மற்றும் அவரது உதவியாளர் சதீஷ் குமார் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், இன்சூரன்ஸ் மோசடி கும்பல்களின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

மீரட்டின் கங்காநகர் பகுதியைச் சேர்ந்த விஷால், சிறிய வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை முகேஷ், ஒரு போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். 2017-ல், விஷால் தனது தாய் பிரபா தேவியை (55) மோட்டார் சைக்கிளில் ஹபூர் செல்லும்போது, "அறியப்படாத வாகனம்" தாக்கியதாகக் கூறி, விபத்து போல சித்தரித்து கொலை செய்தார். இதற்காக 80 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகை பெற்றார். 

இதையும் படிங்க: சண்டையை விலக்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்! அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை!

2022-ல், முதல் மனைவி ஏக்தா (32) வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஒரு வாரத்தில் உயிரிழந்தார். விஷால், இதை "மாரடைப்பு" எனக் கூறி, 80 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பெற்றார். ஆனால், விசாரணையில், ஏக்தாவை கழுத்து நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. மருத்துவமனை ஊழியர்களுடன் சதி செய்து, மரணச் சான்றிதழை மாற்றியிருந்தார்.

2024 ஏப்ரல் 1-ல், தந்தை முகேஷ் (60) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அடுத்த நாள் "சாலை விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டது" எனக் கூறி உயிரிழந்தார். ஆனால், இறப்பு சான்றிதழில் மரணக் காரணம் முரண்பட்டது. இதற்காக விஷால் 50 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கோரிக்கை வைத்தார். மூன்று உறவினர்களின் மரணமும் "விபத்து" என சித்தரிக்கப்பட்டது, சந்தேகத்தை ஏற்படுத்தியது.

விஷால், 2024 பிப்ரவரியில் ஷ்ரேயா (28) என்பவரை 4-வது மனைவியாக திருமணம் செய்தார். அவர் பெயரில் 3 கோடி ரூபாய் பாலிசி எடுத்து, தன்னையே பயனாளியாக பதிவு செய்தார். ஷ்ரேயாவை மேலும் பாலிசிகள் எடுக்க வற்புறுத்தினார். 

ஆனாக் ஷ்ரேயாவிடம் அவரது மாமனார் முகேஷ், ‘எனது உயிருக்கு ஆபத்து இருக்கு’ என எச்சரித்தது நினைவுக்கு வந்தது. குடும்பத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்ததும் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர் பெற்றோர் வீட்டுக்கு தப்பிச் சென்று, மீரட்டு சம்பால் போலீசில் புகார் அளித்தார்.

ஷ்ரேயாவின் புகாரைத் தொடர்ந்து, சம்பால் போலீஸ் (ASP அனுகிருதி சர்மா தலைமையில்) விசாரணை தொடங்கியது. இன்சூரன்ஸ் நிறுவனங்களான Niva Bupa, Tata AIG, Max Life ஆகியவை விஷால் 64 பாலிசிகள் எடுத்ததை உறுதிப்படுத்தின. அவரது வருமானம் ஆண்டுக்கு 12-15 லட்சம் மட்டுமே, ஆனால் 30 லட்சம் பிரீமியம் செலுத்தியது மோசடியை உறுதிப்படுத்தியது. 

மருத்துவமனை ஊழியர்களுடன் சதி செய்து, மரணங்களை விபத்து/நோய் என மாற்றியது தெரியவந்தது. விஷால், உதவியாளர் சதீஷ் குமார் (டெய்லர்), மற்றும் 4 மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேர் தேடப்படுகின்றனர்.

விஷால், 3 திருமணங்கள் செய்து, விலையுயர்ந்த கார்கள், புல்லட் மோட்டார் சைக்கிள்கள் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார். தந்தையின் ஸ்டூடியோ 2 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. ஷ்ரேயாவின் புகார், "அவர் திருமணம் செய்து கொலை செய்கிறார்" என்று குறிப்பிட்டது. போலீஸ், "பேராசையால் தூண்டப்பட்ட கொலைகள்" என தெரிவித்தது. இந்த வழக்கு, இந்தியாவில் இன்சூரன்ஸ் மோசடிகளுக்கு புதிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அதிகரிக்கும் கையால் கழிவு அள்ளல் மரணங்கள்: பின்னடைவின் நிழல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share