பந்தயம் அடித்தார் AK!ஆரத்தழுவிய விஜய்! மூவர்ணக் கொடியுடன் அசத்தல் போஸ்! ரேஸ் டிராக்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
கார் பந்தயம் நிறைவடைந்த பிறகு இருவரும் மூவர்ணக் கொடியுடன் ஒன்றாக இருக்கும் காட்சிகளும், முதல்வர் விஜய் ரேஸ் டிராக்கில் ஓடும் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
லண்டன்: சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்தும், தமிழக முதலமைச்சர் விஜய்யும் சந்தித்துக் கொண்ட காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக, கார் பந்தயம் நிறைவடைந்த பிறகு இருவரும் மூவர்ணக் கொடியுடன் ஒன்றாக இருக்கும் காட்சிகளும், முதல்வர் விஜய் ரேஸ் டிராக்கில் ஓடும் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுடன் முதலமைச்சர் விஜய் பிரிட்டன் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு அவர் நேரில் சென்று, அங்குள்ள உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற ‘மிச்செலின் லே மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 44 கார்கள் பங்கேற்ற நிலையில், சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க: நானும் ரேசர் தான்!! ரேசிங் சூட்டில் முதல்வர் விஜய்! சில்வர்ஸ்டோனில் செம சர்ப்ரைஸ்! வைரலாகும் போட்டோக்கள்!
இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் தனது அணிக்காக களமிறங்கினார். போட்டி தொடங்குவதற்கு முன்பு அஜித்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சிகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
பந்தயம் நிறைவடைந்த நிலையில், அஜித்குமார் இடம்பெற்ற அணி 3-வது இடத்தைப் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பந்தயக் களத்தில் அஜித்துடன் முதலமைச்சர் விஜய் மூவர்ணக் கொடியுடன் இருக்கும் காட்சிகள் வெளியாகின.
இதற்கிடையே, நடிகை திரிஷாவும் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்திற்கு நேரில் வந்தார். முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து அவர் கார் பந்தயத்தைப் பார்வையிட்ட காட்சிகளும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்கும் திட்டத்திற்கு சில்வர்ஸ்டோன் போன்ற சர்வதேச தரத்திலான பந்தயக் களங்களின் செயல்பாடுகள் முக்கிய முன்னுதாரணமாக இருக்கும் நிலையில், முதலமைச்சரின் இந்தப் பார்வை தொழில்துறை மற்றும் விளையாட்டுத் துறையிலும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?