×
 

லண்டனில் முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்கு தடை! போலீஸ் எடுத்த அதிரடி முடிவு! திடீரென ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி!

விஜய்யை நேரில் பார்ப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சிலர் நீண்ட தூரத்தில் இருந்து லண்டனுக்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்: தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க இருந்த பொதுநிகழ்ச்சி, பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை நேரில் காண்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெறாது என அறிவிக்கப்பட்டதால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் குழு இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தப் பயணத்தின்போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி, சுமார் ரூ.12,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 9,400-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, லண்டனின் பிரபலமான தி ஷார்ட் கட்டடத்தின் அருகே விஜய் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய்யை காண்பதற்காக நூற்றுக்கணக்கானோர் அப்பகுதியில் திரண்டனர். சிலர் பல மணி நேரமாக அங்கு காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\

இதையும் படிங்க: தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

கூட்டம் அதிகரித்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீசார் கவலை தெரிவித்தனர். தேவையான போலீஸ் அனுமதி கிடைக்காத சூழலில் நிகழ்ச்சியை நடத்துவது சாத்தியமில்லை என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து விஜய்யின் குழுவினர் ஒலிபெருக்கி மூலம் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

“பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால் தேவையான அனுமதி கிடைக்கவில்லை” என விஜய்யின் குழுவைச் சேர்ந்த ஒருவர் அறிவித்தார்.

விஜய்யை நேரில் பார்ப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சிலர் நீண்ட தூரத்தில் இருந்து லண்டனுக்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தை எதிர்கொண்டுள்ள விஜய்க்கு, லண்டனில் பாதுகாப்பு காரணங்களால் பொதுநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதே நேரத்தில், அவரது இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கமான தமிழகத்திற்கான முதலீட்டு முயற்சிகள் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: கிரகநிலை சரியில்லை! முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் ஜோதிட பரிகாரமா? ஜோதிடர் பெயரால் புதிய சர்ச்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share