அண்ணாமலையால் விழும் அடி மேல் அடி... பாஜக கூடாரம் காலி... மொத்தமாக ராஜினாமா செய்த முக்கிய நிர்வாகிகள்!
பலர் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் சேருவார்கள் என தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்ட பாஜகவில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல். அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்வதாக அறிவிப்பு - பாஜக அலுவலகம் முன் திரண்டு அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கமிட்டதால் பரபரப்பு
தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு நைனார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அண்ணாமலை புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னோட்டமாக நாங்கள் தலைவர்கள் (we tha leaders) என்கிற அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பில் பாஜகவில் இருந்து விலகி ஏராளமானவர்கள் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பாஜக பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "அதே டெய்லர்... அதே வாடகை"..! ஊடகங்களை முடக்குவதா..? அண்ணாமலை சரமாரி கேள்வி..!
விழுப்புரம் மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக திரண்ட பொறுப்பாளர்கள் தங்களின் விலகல் கடிதத்தை கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். விழுப்புரம் மாவட்ட பாஜகவில் இருந்து மாவட்ட பொருளாளர் பொருளாளர், மாவட்ட துணைத் தலைவர்., மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர், ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர், மாவட்ட இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். மேலும் பலர் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் சேருவார்கள் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!