கடலில் சீனா விரிக்கும் 'பயங்கர' வலை... 1,400 படகுகளுடன் மாஸ்டர் பிளான்... மிரளும் உலக நாடுகள்...!
இந்த 1400 படகுகளும் நாடுகளோட கடல் எல்லையை விழுங்க வலை சீனாவின் கடல் திமிங்கலங்கள்.
தென் சீன கடல் பகுதியில தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக சீனா கடலில் குடிமலீசியா என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய வியூகத்தை வகுத்திருக்கு. இத்திட்டத்தின் ஒரு பகுதியா சுமார் 1400 அதிநவீன மீன்பிடி படகளை ஒரே நேரத்தில் கடலில் இறக்கியுள்ளது. இதன் மூலம் மற்ற நாடுகளோட கடல் எல்லையை ஆக்கிரமிக்கிறதுக்கு சீனா திட்டமிட்டுருக்கிறதா? என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கிறாங்க.
மீன்பிடி படகுகளா அல்லது போர் கப்பலா?
இந்த 1400 படகுகளும் மேலோட்டமா பார்த்தா சாதாரண மீன்பிடி படகுகள் போலதான் தெரியும். ஆனா இதோட உட்புற கட்டமைப்பு ஒரு போர் கப்பலுக்கு இணையானது. சாதாரண மீன் பிடிப்படகுள் மரம் அல்லது மெல்லிய இரும்பினால் ஆனது. ஆனால் சீன குடிமலீசியாவுடைய இந்த படகுகள் ராணுவ தரத்திலான வலிமையான இரும்பு தகடுகளால் செய்யப்பட்டது. இவை மற்ற நாடுகளோட சிறிய ரோந்து கப்பல்கள் அல்லது படகுகள் மீது மோதி அவற்றை சேதப்படுத்தி மூழ்கடிக்கிற அளவுக்கு வலிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு எதற்கு முன்னுரிமை? தவெக மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் கேள்வி!
மறைக்கப்பட்ட ஆயுதங்கள்:
இந்த படகுகளில் அதிநவீன இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல நேரங்களில் இவை வெளியில் தெரியாத அளவுக்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்றும், தேவைப்படும்போது மற்ற நாட்டு மீனவர்களையோ அல்லது கடலோர காவல் படையினரையோ மிரட்ட இவை பயன்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. மூன்றாவதாக இதில் அதிநவீன தொழில் நுட்பம் உள்ளது. சாதாரண மீன் தேடும் கருவிகளுக்கு பதிலா சாட்டிலைட் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் எதிரி நாட்டு கப்பல்களோட நடமாட்டத்தை கண்காணிக்கிற ரேடார் கருவிகள் உள்ளதாம். இதன் மூலமாக இந்த படகுகள் சீன கடற்படை தலைமையகத்தோட நேரடியா தொடர்புல இருக்கும்.
இந்த படகுகள் வெறும் மீன் பிடிப்பது கிடையாது. கடலோட நடுவுல இருக்கும் சீன ராணுவ தளங்களுக்கு எரிப்பொருள் உணவு மற்றும் வெடி மருந்துகளை கொண்டு செல்வது போன்ற பணிகளை செய்யக்கூடிய சப்ளை கப்பல்களாக தான் செயல்படுகிறது.
ஏன் இந்த படகுகள் ஆபத்தானது?
சர்வதேச விதிகள் படி ஒரு நாட்டோட கடற்படை கப்பல் இன்னொரு நாட்டோட எல்லைக்குள்ள சென்றால் அது போர் நடவடிக்கையாக கருதப்படும். ஆனா இவை மீன் பிடி படகுகள் என்ற போர்வையில செல்வதால் மற்ற நாடுகள் இவற்றின் மீது நேரடியாக தாக்குதல் நடத்த தயங்குவார்கள். இந்த தயக்கத்தை தான் சீனா தன்னோட ஆக்கிரமிப்பு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. இவை மீன் பிடிக்க வலைகளை விரிக்கிறது கிடையாது. மாறா நாடுகளோட கடல் எல்லையை விழுங்க வலை சீனாவின் கடல் திமிங்கலங்கள். இந்த படகுகளோட ஒரே நோக்கம் ஆக்கிரமிப்பு பகுதிகளை யாரையும் நுழைய விடாம தடுக்கறதுதான்.
இவங்களோட ஆக்கிரமிப்பு உத்தி என்ன?
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான படகுகளை ஒரு குறிப்பிட்ட தீவு அல்லது கடல் பகுதிக்கு அனுப்பி அந்த பகுதியை மொத்தமா சூழ்ந்துக்கிறதுதான் சீனாவோட உத்தி. இதை ஸ்வாமிங் அப்படின்னு அழைக்கிறாங்க. பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் போன்ற நாடுகள் இதனால கடுமையா பாதிக்கப்பட்டிருக்காங்க. இந்த படகுகள் ஒரு தீவை சுற்றி மாதக்கணக்கில் அங்கேயே நங்கூரமிட்டு நிற்கும். நாங்க இங்கே மீன் பிடிக்கிறோம் என சொல்லிட்டு கொஞ்சம் கொஞ்சமா அந்த பகுதியை தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துவிடுவார்கள். பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளோட கடல் எல்லைக்குள்ள இப்படித்தான் சீனா மெல்ல மெல்ல நுழைஞ்சாங்க. இந்த 1400 படகளும் மீன்களை பிடிக்கிறதுக்காக கடலுக்கு வரவில்லை. தென் சீன கடலோட வரைப்படத்தை மாற்ற வந்த சீனாவோட நிழல் ராணுவம் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: போலீசாரிடம் சரணடைய முயன்ற தளபதி சுட்டுக்கொலை..!! சக கூட்டாளிகளே செய்த செயல்..!!