×
 

நைஜீரியாவில் கோர விபத்து: சுக்குநூறான பேருந்து.. 21 விளையாட்டு வீரர்கள் பரிதாப பலி..!

நைஜீரியாவில் விளையாட்டு வீரர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் தென்மேற்கு ஓகுன் மாநிலத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள், மிகவும் மகிழ்ச்சியுடன் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பேருந்தில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என மொத்தம் 35 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு, சுமார் 1000 கி.மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு கனோ மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து  மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. 

இதையும் படிங்க: அரபிக்கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பல்.. சிக்கியவர்களின் நிலைமை என்ன..?

இந்த கோர விபத்தில் 21 விளையாட்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் சிலர் மட்டுமே உயிர் பிழைத்ததாக சொல்லப்படுகிறது. 

நைஜீரியாவில் சாலைகள் மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு வருவதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த விபத்து பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் சாலைகளை சரியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

தற்போது அரங்கேறிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து கீழே விழுந்த போது சாலையில் வேறு எந்த வாகனங்களும் செல்லவில்லை எனவும் டிரைவரின் சோர்வு மற்றும் அதிகப்படியான வேகம் மட்டுமே காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து இரவு நேரத்தில் நடந்துள்ளதால் ஓட்டுநர் ஓய்வு எடுக்காமல் வண்டியை ஓட்டியதே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நைஜீரியா அதிபர் போலா அஹமது தினுபு, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: சிவகங்கை கல்குவாரி விபத்து சம்பவம்.. அதிரடி உத்தரவு போட்ட கனிமவளத்துறை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share