கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட ரூ.4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!
கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்காக 15 வயது சிறுவனுக்கு 4,800 டாலர் பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கிறது. ஆளும் கட்சியை எதிர்த்து பழமைவாத ஜனநாயக மையம் கட்சியைச் சேர்ந்த 39 வயதான மிகுயல் உரிப் (Miguel Uribe) அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை நாடு முழுவதும் நடத்தி வருகிறார். அதன்படி தலைநகர் போகோட்டில் (Bogot) பூங்கா ஒன்றில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவரை நோக்கி 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தலையிலும், மார்பிலும் குண்டு காயங்களால் உரிப் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், மிகுவலின் தலையில் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவமானது, கொலம்பியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: அதிபர் வேட்பாளரை துளைத்த துப்பாக்கி குண்டு.. கொலம்பியாவை அதிர வைத்த சம்பவம்..!
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிப்பின் தந்தை தொழில் அதிபர். தாய் டயானா ஒரு பத்திரிகையாளர். 1990களில் ஆயுதம் ஏந்தி குழு ஒன்றால் அவர் கடத்தப்பட்டார். அவரை மீட்க நடந்த முயற்சியின் போது, டயானா கொல்லப்பட்டார். உரிப்பை கொலை செய்வதற்காக நடந்த முயற்சிக்கு கொலம்பியா நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முழுமையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார்.
"உரிபேயின் குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது பேரிழப்புதான். இந்த வலியை எப்படி கடந்து போவீர்கள் என்று தெரியவில்லை. உரிபேயின் குடும்பத்திற்கு நாங்கள் ஆறுதலாக இருப்போம்" என்று கூறினார்.
தற்போது யூரிப் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பழமைவாத கட்சி சார்பில் தேர்தல் பிரசார பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், யூரிப் மீது துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது சிறுவனையும், அந்த சிறுவனுக்கு ஆயுதங்கள் வழங்கிய இளைஞர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்துவதற்காக சிறுவனுக்கு 4,800 டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.13 லட்சம்) பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடத்துவதற்கான காரணம் என்ன? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!