கைதான 30 ராமேஸ்வரம் மீனவர்கள்... இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு. அபராத தொகை செலுத்தினால் உடனே விடுதலை இல்லையென்றால் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி வழக்கில் கடந்த அக்டோபர் 9ந்தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட 30 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் 26 மீனவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தலா 2.50 லட்சம் (இலங்கை மதிப்பு) ரூ.73 ஆயிரம் (இந்திய மதிப்பு) மேலும் 4 மீனவர்கள் ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டு இரண்டாவது முறை சிறைபிடிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா ரூ.2.75 லட்சம் (இலங்கை மதிப்பு) 80 ஆயிரம் (இந்திய ரூபாய்) அபராத தொகை விதித்து உத்தரவிட்டார்
இதையும் படிங்க: அதி தீவிர புயல்... மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புங்க... அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அறிவுறுத்தல்...!
அபராத தொகையை கட்டினால் மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் அல்லது மீனவர்கள் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து மீனவர்கள் 30 பேரும் வெளிக்கடை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: "HIGH ALERT"... ப்ளீஸ் திரும்பி வந்துடுங்க... நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை...!