கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் (US Consulate) இன்று போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவத்தின் போது நடத்தப்பட்டத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் மற்றும் மீட்புப் பணிகள் தெரிவித்துள்ளன.
இன்று காலை கராச்சியின் மாய் கோலாச்சி (Mai Kolachi) சாலையில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் நோக்கி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். திடீரென ஆக்ரோஷமடைந்த கும்பல், பாதுகாப்புத் தடைகளைத் தகர்த்து தூதரக வளாகத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்த ஜன்னல்கள் மற்றும் கதவுகளைச் சூறையாடியதோடு, வளாகத்தின் ஒரு பகுதிக்கும் தீ வைத்தனர்.
போராட்டக்காரர்களைக் கலைக்கப் பாகிஸ்தான் போலீசாரும், துணை ராணுவப் படையினரும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை கட்டுப்பாட்டை மீறியதைத் தொடர்ந்து, தூதரகத்தின் உள்ளே இருந்தப் பாதுகாப்புப் படையினர் நடத்தியத் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: வெடித்தது போர் !! மாறி மாறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்..!! நிலவும் பதற்றம்..!!
கமேனியின் மறைவிற்கு நீதி கேட்டு, ஷியா அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டன என முழக்கமிட்டவாறு அவர்கள் தூதரகத்தைத் தாக்கினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கராச்சி நகரம் முழுவதும் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டு, ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்திலும் உள்ள அமெரிக்க அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான ராஜதந்திர உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரை விட விளைவுகள் கொடூரமானதாக இருக்கும்! மேற்கு பிராந்திய கமாண்டர் மனோஜ் குமார் அதிரடி!