அடப்பாவி! இரட்டை கொலை செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் நின்ற குற்றவாளி... பகிர் வீடியோ...!
விருதுநகரில் கோவில் காவலாளிகளை கொலை செய்த வழக்கின் குற்றவாளி மக்களோடு மக்களாக நின்று வேடிக்கை பார்த்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
ராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் இரவு நேர காவலாளிகள் இருவர் கோயிலுக்குள் வெட்டி கொவை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து (60), சங்கர பாண்டியன் (50) மற்றும் மாடசாமி ஆகிய மூவர் இந்து சமய அறநிலையத்த துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்து அருளிய சாமி கோயிலில் காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதில் மாடசாமி நேற்று பகலில் வேலை பார்த்ததால் மற்ற இருவரும் இரவு நேரத்தில் காவல் காத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாடசாமி கோவிலுக்கு வந்த போது பிரதான கதவின் சிறிய கதவு திறந்திருந்தது. அருகே இருந்த உண்டியல் சேதமாகி இருந்தது. இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் மாடசாமி தகவல் கூறியுள்ளார். அவரது தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.
உண்டியல் உடைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது உறுதி ஆனது. தகவல் அறிந்து இறந்த இருவரது உறவினர்களும் கோவில் முன் திரண்டதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து இரண்டு காவலாளிகளை கொலை செய்த குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இரட்டை கொலை வழக்கில் கைது செய்ய முயன்ற போது தாக்கிவிட்டு தப்பும் என்ற நாகராஜ் என்பவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த சதி? நாங்கதான் செஞ்சோம்... பரபரப்பு வாக்குமூலம்...!
கொலை நிகழ்ந்த உடன் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போது மக்களோடு மக்களாக நின்று கொலையாளி வேடிக்கை பார்த்துள்ளார். அதுமட்டுமில்லாத போலீஸ் அருகிலேயே நின்று பேசிக் கொண்டும் இருந்துள்ளார் நாகராஜ். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இரண்டு கொலைகளை செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் வேடிக்கை பார்த்த குற்றவாளியின் செயல் அதிர செய்கிறது. கொலை வழக்கில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து அவர் வெளியில் வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: குலை நடுங்க வைக்கும் இரட்டைக் கொலை… விரைவில் கைது… மாவட்ட எஸ்.பி. உறுதி…!