×
 

சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை? எங்களுக்கு எந்த சம்மதமும் இல்ல... போலீசை கைகாட்டிய கிரிக்கெட் வாரியம்..!

விசில் தடை செய்யப்பட்டதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

2026 டி20 உலகக் கோப்பை தொடரின் போது, குறிப்பாக நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டியின்போது, மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது போன்ற தகவல்கள் பரவின. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்த தடை குறித்து முதலில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின.

ரசிகர்களிடம் விசில் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மைதானத்திற்கு வெளியே விற்கும் கடைக்காரர்களுக்கு கூட விசில் விற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதன் காரணமாக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம் சுமத்தப்பட்டது.

அரசியல் நோக்கத்தோடு விசிலுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. தமிழக வெற்றி கழகமும் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உரிமையை பறிக்கும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்ற ரசிகர்களிடம் விசில் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மைதானத்தில் விசில் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் விளக்கம் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்... ஆனால்..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்..!

விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டதற்கும் பிசிசிஐ, ஐசிசி மற்றும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என TNCA விளக்கம் கொடுத்துள்ளது. நேற்று கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற ரசிகர்களிடமிருந்து விசில் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வெளியான நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ்காரத்தில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கூட்டணி முறிவா? திமுகவுக்கு ஆதரவு இல்லையா..? தவாக தலைவர் வேல்முருகன் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share