×
 

திக்... திக்... திருப்பம்....!! - முக்கிய அஸ்திரத்தை கையில் எடுக்கப்போகும் விஜய்... திராவிட கட்சிகளுக்கு செம்ம ஷாக்...!

ஆட்சியமைக்க திமுக, அதிமுக ஒன்றிணைந்தால் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள் 108 இடங்களிலும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம். தனி பெரும்பான்மையில் வெற்றி பெறாத காரணத்தினால ஆட்சி அமைப்பதற்கு இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது பெரும்பான்மையை நிரூபிக்க திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு கோறியிருந்தனர். ஆனால் காங்கிரஸ் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கக்கூடிய நிலையில், இன்னும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய முடிவை தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இன்று அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றவுள்ளது. 

மறுபக்கம் பெரும்பான்மைக்கான 118 என்ற மேஜிக் நெம்பரை காட்டினால் மட்டும் ஆட்சி அமைக்க அழைப்பேன் என தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் திட்டவட்டமாக தவெக தலைவர் விஜயிடம் தெரிவித்துள்ளார். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள விஜய், திமுக கூட்டணிக்கு குறி வைத்துள்ளார். நிலைமை இப்படியிருக்க மற்றொருபுறம் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. 

சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றியும் ஆட்சி அமைக்க முடியாமல் தவெக திணறி வருகிறது. இதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன, ஆட்சியைக் கைப்பற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னவென திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆலோசித்து வருகின்றன. நேற்று தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களோடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.  தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முடியாத ஒரு சூழ்நிலையில அடுத்த கட்ட வாய்ப்பு எவ்வாறு இருக்க போகிறது என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினரோடு ஆலோசனை நடத்திருக்கிறார். அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மூத்த நிர்வாகிகளோடு தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார்.  குறித்து திமுக தலைவரும் அந்த கட்சியுடைய மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரோடு தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு இருக்கப்போகிறது? என தனித்தனியாக கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின. 

இதையும் படிங்க: மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

இதனிடையே, திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம் திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைத்தால் மு.க.ஸ்டாலின் இரண்டறை ஆண்டுகளுக்கும், எடப்பாடி பழனிசாமி இரண்டறை ஆண்டுகளுக்கும் முதலமைச்சராக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது. 

50 ஆண்டு கால பகையை மறந்து திமுக, அதிமுக கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியாகி வரும் செய்திகளுக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் அதிரடி அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரினால், மக்கள் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் இந்த முயற்சியைத் தடுக்க தவெக ஒரு அதிரடித் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. கட்சியின் 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. 108 எம்.எல்.ஏ-க்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தால், தமிழக சட்டசபையில் ஒரு பெரிய அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும். இது மீண்டும் ஒரு தேர்தலை நோக்கி மாநிலத்தைத் தள்ளக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 
 

இதையும் படிங்க: அவசரப்பட்டு போகாதீங்க..! கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share