×
 

பேக் அடித்த ட்ரம்ப்... கையேந்தும் இஸ்ரேலை கை கழுவ திட்டம்... அமெரிக்க ராணுவத்திற்கு பறந்த உத்தரவு! 

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 9வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்த போரில் அமெரிக்கா களமிறங்குமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக நீடித்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலை கைவிட அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

லெபனான், பாலஸ்தீனம், ஏமனைத் தொடர்ந்து தற்போது இஸ்லாமிய நாடான ஈரானை இஸ்ரேல் குறிவைத்துள்ளது உலக நாடுகளின் கண்டனத்தை குவித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு சப்போர்ட்டாக இருந்து வருகிறது. குறிப்பாக ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்குவது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தியது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எங்கே மூன்றாம் உலகப்போர் மூண்டுவிடுமோ? என அச்சம் மோலோங்கிய நிலையில், தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

\

என்னதான் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று மூச்சுக்கு 300 முறை ட்ரம்ப் கூறி வந்தாலும், தற்போது வரை அமெரிக்க படைகள் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லீவட் நேற்று செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் ஈரானை தாக்குவது குறித்து ட்ரம்ப் இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு வாரம் வரை ட்ரம்பின் கால அவகாசத்துக்கான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் அமெரிக்கா தனது சக்தி வாய்ந்த குண்டை வீசினால் எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதையும் படிங்க: எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

இன்னும் சொல்ல வேண்டுமானால் ஈரான் ஒரு மலையின் அடியில் தனது அணுசக்தி மையத்தை இயக்கி வருகிறது. இதனை சாதாரண குண்டுகளால் அழிக்க முடியாது. அமெரிக்கா வசம் இருக்கும் பங்கர் பஸ்டர் குண்டுதான் இதற்கு தேவை. அந்த குண்டு பயன்படுத்தப்படும் பட்சத்தில் ஈரானின் அணுசக்தி மையம் முழுமையாக தகர்க்கப்பட முடியுமா என்று கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. எனவேதான் தாக்குதல் திட்டத்தை ட்ரம்ப் தள்ளி போட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

அதாவது 30,000 பவுண்டுகள் எடை கொண்ட பங்கர் பஸ்டர் ஏவுகனை வெடிப்பதற்கு முன்பு 200 அடி ஆழம் துளைத்து செல்லும் சக்தி கொண்டது. GPS சிக்னலின் உதவியுடன் இலக்கை கச்சிதமாக தாக்கும் திறன் மிக்கது. 300 அடி ஆழத்தில் மலைகளை குடைந்து ஈரானின் அணுசக்தி மையம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் 200 அடி வரை மட்டும் தொலைக்கும் குண்டு எப்படி 300 அடி ஆழத்தில் இருக்கும் மையத்தை அழிக்கும் என்பதுதான் தற்போது தலைத்தூக்கி உள்ள கேள்வி. நிலைமை இப்படி இருக்க அணுசக்தி மையம் முற்றிலுமாக அழிக்க முடியும் என்பதை உறுதி செய்தால் மட்டுமே ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று என அமெரிக்க ராணுவத்திற்கு டிரம்ப் கட்டளை விதித்துள்ளதாக கார்டியன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. கசிகிறதா அணுகதிர்வீச்சு? மக்கள் அச்சம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share