×
 

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது தீவைத்தவர் கைது... முதியவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் வீட்டின் வாசல் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் என்பவர் மனைவி ஸ்ரீதேவி(45). இவரது தம்பி பாண்டியராஜன் மனைவி சாந்தி(42). சாந்தி கோபாலபுரம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். ஸ்ரீதேவி தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் சர்ச் தெருவில் உள்ள சாந்தியின் வீட்டில் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் மர்ம நபர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பெண்கள் உடலிலும் தீ பற்றி எரிந்து அலறி துடித்துள்ளனர். அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் தீ காயம் அடைந்த இரண்டு பெண்களும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: பீஹார் பயணிகள் ரயிலில் திடீரென பற்றிய தீ! கொளுந்துவிட்டெறிந்த பெட்டிகள்! அலறிய மக்கள்!

இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தீ காயம் அடைந்த அந்த பெண்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கல்குறிச்சி மணிநகரை சேர்ந்த சாந்தியின் கணவரின் நண்பர் முத்து(60) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

சாந்தியின் கணவர் பாண்டியராஜன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் அவரது நண்பர் கைது செய்யப்பட்ட முத்து சாந்திக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் ஒரு கட்டத்தில் சாந்தியை முத்து தன்னுடன் சேர்ந்து வாழ கூறியுள்ளார். 
சம்பவம் நடந்த இரவு அன்றும் சாந்தியிடம் முத்து நீண்ட நேரம் பேசி உள்ளார். ஆனால் சாந்தி முத்துவிடம் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். 

இதனால் முத்து ஆத்திரத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கிருந்து சென்ற முத்து பின்னர் மீண்டும் அதிகாலை நேரத்தில் சாந்தியின் வீட்டிற்கு வந்து சாந்தி மற்றும் அவர் அருகில் படுத்திருந்த ஸ்ரீதேவி மீதும் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி உள்ளார். போலீசார் விசாரணை நடத்தி மதுரையில் தலைமறைவாக இருந்த முத்துவை கைது செய்தனர்.

இதையும் படிங்க: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!! ஸ்விஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ..!! 6 பயணிகள் காயம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share